Category: திர்மிதீ

Tirmidhi

Tirmidhi-259

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

259.


«كُنَّا نَفْعَلُ ذَلِكَ، فَنُهِينَا عَنْهُ، وَأُمِرْنَا أَنْ نَضَعَ الأَكُفَّ عَلَى الرُّكَبِ»،


Tirmidhi-258

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

258.


«إِنَّ الرُّكَبَ سُنَّتْ لَكُمْ، فَخُذُوا بِالرُّكَبِ».


Tirmidhi-254

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

254.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ وَهُوَ يَهْوِي».


Tirmidhi-253

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

253.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ، وَقِيَامٍ وَقُعُودٍ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ».


Tirmidhi-252

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

252.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَؤُمُّنَا، فَيَأْخُذُ شِمَالَهُ بِيَمِينِهِ».


Tirmidhi-1502

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1502.


«نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالحُدَيْبِيَةِ البَدَنَةَ عَنْ سَبْعَةٍ، وَالبَقَرَةَ عَنْ سَبْعَةٍ»


Tirmidhi-689

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாக இருக்கும் என்பது குறித்து வந்துள்ளவை.

689. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்றதை விட, இருபத்தொன்பது நாட்கள் நோன்பு நோற்றதே அதிகமாகும்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

“மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாக இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய இப்பாடப் பொருள்தொடர்பான செய்திகள் உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி), ஆயிஷா (ரலி), ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி), ஜாபிர் (ரலி), உம்மு ஸலமா (ரலி), அபூபக்ரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.


«مَا صُمْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعًا وَعِشْرِينَ أَكْثَرُ مِمَّا صُمْنَا ثَلَاثِينَ»


Tirmidhi-692

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இரு பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் குறையாது என்பது குறித்து வந்துள்ளவை.

692. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு பெருநாட்களின் மாதங்கள் குறையாது.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அபூபக்ரா (ரலி) அவர்கள் வழியாக வரும் இந்த ஹதீஸ் ‘ஹஸன்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். மேலும், இந்தச் செய்தி அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா அவர்கள் வழியாக முர்ஸலாக-நபித்தோழரைக் குறிப்பிடாமலும் வந்துள்ளது.

“பெருநாட்களைக் கொண்ட இரு மாதங்கள் குறையாது” என்ற இந்த ஹதீஸின் கருத்து “ஒரே வருடத்தில் ரமலான், துல்ஹிஜ்ஜாவின் மாதங்கள் நாட்களின் எண்ணிக்கையில் ஒன்றாகக் குறைந்துவிடுவதில்லை. அவற்றில் ஒன்று குறைந்தால், மற்றொன்று முழுமையாக (முப்பது நாட்களாக) இருக்கும்” என்று அஹ்மத் இமாம் கூறியுள்ளார்.

இந்த ஹதீஸின் கருத்து, “இந்த மாதங்கள் நாட்களின் எண்ணிக்கையில் இருபத்தொன்பது நாட்களாக இருந்தாலும், இவை நன்மையிலும் சிறப்பிலும் குறைவில்லாத முழுமையான மாதங்களே ஆகும்” என்று இஸ்ஹாக் பின் ராஹவைஹி அவர்கள் கூறியுள்ளார். இஸ்ஹாக் அவர்களின் இந்த நிலைப்பாட்டின்படி, ஒரே வருடத்தில் இவ்விரு மாதங்களும் ஒரே நேரத்தில் இருபத்தொன்பது நாட்களாகக் குறைவதற்கும் வாய்ப்புண்டு.


” شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ: رَمَضَانُ، وَذُو الحِجَّةِ “


Tirmidhi-261

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் தஸ்பீஹ் (இறைத் துதிச் சொற்களை) கூறுவது குறித்து வந்துள்ளவை.

261. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ருகூஉ செய்யும் போது, தனது ருகூஃவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ என்று மூன்று முறை கூறினால், அவரது ருகூஉ முழுமையடைந்து விடுகிறது. இதுவே அதன் குறைந்தபட்ச அளவாகும். அவர் ஸஜ்தாச் செய்யும் போது, தனது ஸஜ்தாவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ என்று மூன்று முறை கூறினால், அவரது ஸஜ்தா முழுமையடைந்து விடுகிறது. இதுவே அதன் குறைந்தபட்ச அளவாகும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஹுதைஃபா (ரலி), உக்பா பின் ஆமிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் வழியாக வரும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் முத்தஸில் அல்ல. (இது முன்கதிஃ ஆகும்). ஏனெனில், அவ்ன் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை.

இருப்பினும், அறிஞர்களிடம் நடைமுறை இதன்படியே உள்ளது. ஒரு மனிதர் ருகூஉ, ஸஜ்தாவில் மூன்று தஸ்பீஹ்களை விடக் குறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

இமாம் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னால் தொழுபவர்கள் மூன்று தஸ்பீஹ்களைப்

” إِذَا رَكَعَ أَحَدُكُمْ، فَقَالَ فِي رُكُوعِهِ: سُبْحَانَ رَبِّيَ العَظِيمِ ثَلَاثَ مَرَّاتٍ، فَقَدْ تَمَّ رُكُوعُهُ، وَذَلِكَ أَدْنَاهُ، وَإِذَا سَجَدَ، فَقَالَ فِي سُجُودِهِ: سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى ثَلَاثَ مَرَّاتٍ، فَقَدْ تَمَّ سُجُودُهُ، وَذَلِكَ أَدْنَاهُ “.


Tirmidhi-283

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இரு ஸஜ்தாக்களுக்கு இடையே குத்துக்காலிட்டு அமர்வதற்கு அனுமதி.

283. தாஊஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், (தொழுகையில் இரு ஸஜ்தாக்களுக்கிடையில்) குதிகால்களின் மீது குந்தி அமர்வதைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், ‘அது நபிவழியாகும்’ என்று கூறினார்கள். நாங்கள், ‘அது ஒரு மனிதனுக்கு (சிரமமான அல்லது) கடினமானதாக நாங்கள் கருதுகிறோம்’ என்று கூறினோம். அதற்கு அவர்கள், ‘மாறாக, அது உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்’ என்று கூறினார்கள்.


 


قُلْنَا لِابْنِ عَبَّاسٍ فِي الإِقْعَاءِ عَلَى القَدَمَيْنِ، قَالَ: «هِيَ السُّنَّةُ»، فَقُلْنَا: إِنَّا لَنَرَاهُ جَفَاءً بِالرَّجُلِ، قَالَ: «بَلْ هِيَ سُنَّةُ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»،


Next Page » « Previous Page