பாடம்:
சாட்சியின்றி திருமணம் இல்லை என்பது குறித்து வந்துள்ளவை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரிகள் தான், சாட்சியின்றி (சான்று இன்றி) தங்களைத் தாங்களே திருமணம் செய்து கொடுப்பார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
யூஸுஃப் பின் ஹம்மாத் (ரஹ்) கூறியதாவது:
அப்துல் அஃலா அவர்கள் இந்த ஹதீஸை தஃப்ஸீர் (குர்ஆன் விளக்கம்) பாட தலைப்பில், நபியின் சொல்லாக அறிவித்தார். அதே ஹதீஸை தலாக் (விவாகரத்து) பாட தலைப்பில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்தார். நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.
(திர்மிதி: 1103)بَابُ مَا جَاءَ لَا نِكَاحَ إِلَّا بِبَيِّنَةٍ
حَدَّثَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«البَغَايَا اللَّاتِي يُنْكِحْنَ أَنْفُسَهُنَّ بِغَيْرِ بَيِّنَةٍ»
قَالَ يُوسُفُ بْنُ حَمَّادٍ: «رَفَعَ عَبْدُ الأَعْلَى هَذَا الحَدِيثَ فِي التَّفْسِيرِ وَأَوْقَفَهُ فِي كِتَابِ الطَّلَاقِ وَلَمْ يَرْفَعْهُ».
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1103.
Tirmidhi-Alamiah-1022.
Tirmidhi-JawamiulKalim-1018.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . யூஸுஃப் பின் ஹம்மாத்
3 . அப்துல்அஃலா பின் அப்துல்அஃலா
4 . ஸயீத் பின் அபூஅரூபா
5 . கதாதா
6 . ஜாபிர் பின் ஸைத்
7 . இப்னு அப்பாஸ் (ரலி)
…இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1103, 1104, …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1101,
சமீப விமர்சனங்கள்