தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1103

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

சாட்சியின்றி திருமணம் இல்லை என்பது குறித்து வந்துள்ளவை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரிகள் தான், சாட்சியின்றி (சான்று இன்றி) தங்களைத் தாங்களே திருமணம் செய்து கொடுப்பார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

யூஸுஃப் பின் ஹம்மாத் (ரஹ்) கூறியதாவது:

அப்துல் அஃலா அவர்கள் இந்த ஹதீஸை தஃப்ஸீர் (குர்ஆன் விளக்கம்) பாட தலைப்பில், நபியின் சொல்லாக அறிவித்தார். அதே ஹதீஸை தலாக் (விவாகரத்து) பாட தலைப்பில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்தார். நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.

(திர்மிதி: 1103)

بَابُ مَا جَاءَ لَا نِكَاحَ إِلَّا بِبَيِّنَةٍ

حَدَّثَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«البَغَايَا اللَّاتِي يُنْكِحْنَ أَنْفُسَهُنَّ بِغَيْرِ بَيِّنَةٍ»

قَالَ يُوسُفُ بْنُ حَمَّادٍ: «رَفَعَ عَبْدُ الأَعْلَى هَذَا الحَدِيثَ فِي التَّفْسِيرِ وَأَوْقَفَهُ فِي كِتَابِ الطَّلَاقِ وَلَمْ يَرْفَعْهُ».


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1103.
Tirmidhi-Alamiah-1022.
Tirmidhi-JawamiulKalim-1018.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . யூஸுஃப் பின் ஹம்மாத்

3 . அப்துல்அஃலா பின் அப்துல்அஃலா

4 . ஸயீத் பின் அபூஅரூபா

5 . கதாதா

6 . ஜாபிர் பின் ஸைத்

7 . இப்னு அப்பாஸ் (ரலி)


…இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1103, 1104, …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1101,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.