Author: Farook

Almujam-Alawsat-5902

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5902. இறைநம்பிக்கையாளரின் உயிர் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். கழுதை இறப்பது போன்று இறப்பதை நான் விரும்பமாட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “கழுதை இறப்பது போன்று என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திடீரென இறந்துவிடுவது” என்று பதிலளித்தார்கள்.

பின்பு இறைமறுப்பாளரின் உயிர், தாடை வழியாக வெளியேறுகிறது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَلَا أُحِبُّ مَوْتًا كَمَوْتِ الْحِمَارِ» ، قِيلَ: وَمَا مَوْتُ الْحِمَارِ؟ قَالَ: «مَوْتُ الْفَجْأَةِ»

قَالَ: «وَرُوحُ الْكَافِرِ تَخْرُجُ مِنْ أَشْدَاقِهِ»


Tirmidhi-980

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

980. இறைநம்பிக்கையாளரின் உயிர் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். கழுதை இறப்பது போன்று இறப்பதை நான் விரும்பமாட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “கழுதை இறப்பது போன்று என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திடீரென இறந்துவிடுவது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

 


إِنَّ نَفْسَ الْمُؤْمِنُ تَخْرُجُ رَشْحًا، وَلاَ أُحِبُّ مَوْتًا كَمَوْتِ الْحِمَارِ. قِيلَ: وَمَا مَوْتُ الْحِمَارِ؟ قَالَ: مَوْتُ الْفَجْأَةِ.


Almujam-Alkabir-165

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

165. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திடீர் மரணத்தை விட்டும், பாம்பு கடித்து இறப்பதை விட்டும், வனவிலங்குகள் தாக்கி இறப்பதை விட்டும், தீயினால் கருகி இறப்பதை விட்டும், நீரில் மூழ்கி இறப்பதை விட்டும், ஏதேனும் ஒன்றின்மேல் விழுந்து இறப்பதை விட்டும், தன் மீது ஏதெனும் விழுந்து இறப்பதை விட்டும், யுத்தக்கலத்தில் (தன் படையினரிடம்) பின்னோக்கிசெல்லும் போது கொல்லப்பட்டு இறப்பதை விட்டும் போன்ற இந்த ஏழு மரணங்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعٍ، مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَمِنْ لَدْغِ الْحَيَّةِ، وَمِنْ أَكْلِ السَّبُعِ، وَمِنَ الْحَرْقِ، وَمِنَ الْغَرَقِ، وَمِنْ أَنْ يَخِرَّ عَلَيْهِ شَىءٌ، وَمِنَ الْقَتْلِ فِرَارًا مِنَ الزَّحْفِ»


Almujam-Alawsat-173

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

173. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திடீர் மரணத்தை விட்டும், பாம்பு கடித்து இறப்பதை விட்டும், வனவிலங்குகள் தாக்கி இறப்பதை விட்டும், தீயினால் கருகி இறப்பதை விட்டும், நீரில் மூழ்கி இறப்பதை விட்டும், ஏதேனும் ஒன்றின்மேல் விழுந்து இறப்பதை விட்டும், தன் மீது ஏதெனும் விழுந்து இறப்பதை விட்டும், யுத்தக்களத்தில் (தன் படையினரிடம்) பின்னோக்கிசெல்லும் போது கொல்லப்பட்டு இறப்பதை விட்டும் போன்ற இந்த ஏழு மரணங்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ: «مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَمِنْ لَدْغِ الْحَيَّةِ، وَمِنْ أَكَلِ السَّبْعِ، وَمِنَ الْغَرَقِ، وَمِنَ الْحَرْقِ، وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ، وَمِنَ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ»


Musnad-Ahmad-17818

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17818. அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திடீர் மரணத்தை விட்டும், பாம்பு கடித்து இறப்பதை விட்டும், வனவிலங்குகள் தாக்கி இறப்பதை விட்டும், தீயினால் கருகி இறப்பதை விட்டும், நீரில் மூழ்கி இறப்பதை விட்டும், ஏதேனும் ஒன்றின்மேல் விழுந்து இறப்பதை விட்டும், தன் மீது ஏதெனும் விழுந்து இறப்பதை விட்டும், யுத்தக்களத்தில் (தன் படையினரிடம்) பின்னோக்கிசெல்லும் போது கொல்லப்பட்டு இறப்பதை விட்டும் போன்ற இந்த ஏழு மரணங்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.

-அறிவிப்பாளர் மாலிக் பின் அப்துல்லாஹ் , வேறுஇடத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) யிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்.


أَنَّهُ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ، مَوْتِ الْفُجَاءَةِ، وَمِنْ لَدْغِ الْحَيَّةِ، وَمِنَ السَّبُعِ، وَمِنَ الْغَرَقِ، وَمِنَ الْحَرْقِ، وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ، وَمِنَ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ


Musnad-Ahmad-6594

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6594. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திடீர் மரணத்தை விட்டும், பாம்பு கடித்து இறப்பதை விட்டும், வனவிலங்குகள் தாக்கி இறப்பதை விட்டும், தீயினால் கருகி இறப்பதை விட்டும், நீரில் மூழ்கி இறப்பதை விட்டும், ஏதேனும் ஒன்றின்மேல் விழுந்து இறப்பதை விட்டும், தன் மீது ஏதெனும் விழுந்து இறப்பதை விட்டும், யுத்தக்களத்தில் (தன் படையினரிடம்) பின்னோக்கிசெல்லும் போது கொல்லப்பட்டு இறப்பதை விட்டும் போன்ற இந்த ஏழு மரணங்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ: مَوْتِ الْفُجَاءَةِ، وَمِنْ لَدْغِ الْحَيَّةِ، وَمِنَ السَّبُعِ، وَمِنَ الْحَرَقِ، وَمِنَ الْغَرَقِ، وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ، أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ، وَمِنَ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ


Almujam-Assaghir-877

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

877. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முதல்நாள் இரவில் பிறைப் பார்க்கப்பட்டு இது இரண்டாம் நாளின் பிறை என்று கூறப்படுமளவிற்கு பிறை பெரியதாக தெரிவது மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مِنِ اقْتِرَابِ السَّاعَةِ انْتِفَاخُ الْأَهِلَّةِ , وَأَنْ يُرَى الْهِلَالُ لِلَيْلَةٍ , فَيُقَالُ: هُوَ ابْنُ لَيْلَتَيْنِ


Almujam-Alawsat-6864

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6864. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முதல்நாள் இரவில் பிறைப் பார்க்கப்பட்டு இது இரண்டாம் நாளின் பிறை என்று கூறப்படுமளவிற்கு பிறை பெரியதாக தெரிவது மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مِنْ أَشْرَاطِ السَّاعَةِ انتفاخُ الْأَهِلَّةِ، حَتَّى يُرَى الْهِلَالُ لِلَيْلَتِهِ، فَيُقَالُ: هُوَ لِلَيْلَتَيْنِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-37552

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

37552. பிறை பெரிதாக தெரிவது மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளமாகும் என்று அபுல் வத்தாக் கூறினார்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் ஹாரிஸ்


«مِنَ اقْتِرَابِ السَّاعَةِ انْتِفَاخُ الْأَهِلَّةُ»


Almujam-Alkabir-10451

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறை பெரிதாக தெரிவது மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளமாகும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

 


«مِنِ اقْتِرَابِ السَّاعَةِ انْتِفَاخُ الْأَهِلَّةِ»


Next Page » « Previous Page