Author: Farook

Musannaf-Abdur-Razzaq-6776

ஹதீஸின் தரம்: Pending

6776. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியாகும். பாவிக்கு (இறைகோபத்தின்) தண்டனையாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் அஹ்வஸ் (ரஹ்)


«مَوْتُ الْفُجَاءَةِ تَخْفِيفٌ عَلَى الْمُؤْمِنِ، وَأَسَفٌ عَلَى الْكُفَّارِ»


Musannaf-Abdur-Razzaq-6779

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6779. திடீர் மரணம் இறைவனின் கோபப்பிடியாகும் என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் எச்சரிப்பார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் அபூகஸீர்


أَنَّ حُذَيْفَةَ، «كَانَ يُشَدَّدُ فِي مَوْتِ الْفُجَاءَةِ، أَخْذَةٌ عَلَى سَخَطٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12008

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12008. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திடீர் மரணம் மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.


«مِنْ أَشْرَاطِ السَّاعَةِ مَوْتُ الْبِدَارِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12005

ஹதீஸின் தரம்: Pending

12005. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளர்களுக்கு நிம்மதியாகும். இறைமறுப்பாளர்களுக்கு கைசேதமாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மாணவர்களில் சிலர் கூறினர்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


«مَوْتُ الْفُجَاءَةِ رَاحَةٌ عَلَى الْمُؤْمِنِينَ، وَأَسَفٌ عَلَى الْكُفَّارِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12004

ஹதீஸின் தரம்: Pending

12004. .அஷ்ஷபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திடீர் மரணங்கள் நிகழ்வது மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளமாகும் என (எங்கள் காலத்தில்) கூறப்பட்டது.


«كَانَ يُقَالُ اقْتِرَابُ السَّاعَةِ مَوْتُ الْفُجَاءَةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12006

ஹதீஸின் தரம்: Pending

12006. தமீம் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒரு மனிதர் திடீரென இறந்துவிட்டார். உடனே நபித்தோழர்களில் சிலர் இது அல்லாஹ்வின் கோபப்பிடியாகும் என்று கூறினர். நான் இதுப்பற்றி இப்ராஹீம் அன்னகயீ அவர்களிடம் கூறினேன். (இப்ராஹீம் அவர்களிடம் நாங்கள் எந்த ஹதீஸைப் பற்றி கூறி விளக்கம் கேட்டாலும் அதைப்பற்றி அவர் தெரிந்திருப்பார்)

அதற்கு அவர்கள், ஆம், திடீர் மரணம் இறைகோபத்தின் தண்டனை போன்றது தான் என்று நபித்தோழர்கள் வெறுப்பார்கள் என்று கூறினார்.


مَاتَ مِنَّا رَجُلٌ بَغْتَةً، فَقَالَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَخْذَةَ غَضَبٍ فَذَكَرْتُهُ لِإِبْرَاهِيمَ وَقَلَّ مَا كُنَّا نَذْكُرُ لِإِبْرَاهِيمَ حَدِيثًا، إِلَّا وَجَدْنَا عِنْدَهُ فِيهِ فَقَالَ: «كَانُوا يَكْرَهُونَ أَخْذَةً كَأَخْذَةِ الْأَسَفِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12009

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12009. இப்ராஹீம் அன்னகயீ அவர்கள் திடீர் மரணத்தை வெறுத்தார்கள்.


«أَنَّهُ كَرِهَ مَوْتُ الْفُجَاءَةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12010

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12010. திடீர் மரணம், இறைகோபத்தினால் பிடிக்கப்படுவதாகும் என்று நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்.

அறிவிப்பவர்: உபைத் பின் காலித் (ரலி)


فِي مَوْتِ الْفُجَاءَةِ قَالَ: «أَخْذَةُ أَسَفٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12007

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12007. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு (இறை) அருளாகும். பாவிக்கு தண்டனையாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும், ஆயிஷா (ரலி) அவர்களும் கூறினர்.

அறிவிப்பவர்: அபுல் அஹ்வஸ் (ரஹ்)


«مَوْتُ الْفُجَاءَةِ رَأْفَةٌ بِالْمُؤْمِنِ، وَأَسَفٌ عَلَى الْفَاجِرِ»


Next Page » « Previous Page