23895.
«أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُوذِنُهُ بِالصَّلَاةِ وَهُوَ يُرِيدُ الصِّيَامَ، فَشَرِبَ، ثُمَّ نَاوَلَنِي وَخَرَجَ إِلَى الصَّلَاةِ»
23895.
«أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُوذِنُهُ بِالصَّلَاةِ وَهُوَ يُرِيدُ الصِّيَامَ، فَشَرِبَ، ثُمَّ نَاوَلَنِي وَخَرَجَ إِلَى الصَّلَاةِ»
23889.
أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُوذِنُهُ بِالصَّلَاةِ – قَالَ أَبُو أَحْمَدَ: وَهُوَ يُرِيدُ الصِّيَامَ – «فَدَعَا بِقَدَحٍ فَشَرِبَ وَسَقَانِي، ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ لِلصَّلَاةِ، فَقَامَ يُصَلِّي بِغَيْرِ وُضُوءٍ يُرِيدُ الصَّوْمَ»
23901.
«أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَوَجَدَهُ يَتَسَحَّرُ فِي مَسْجِدِ بَيْتِهِ»
759. அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத் (இப்னு அபூஹாதிம்) கூறுகிறார்:
ரவ்ஹு பின் உபாதா அவர்கள், ஹம்மாத் பின் ஸலமா —> முஹம்மது பின் அம்ர் —> அபூஸலமா —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் “உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்” என்ற செய்தி பற்றியும்,
ஹம்மாத் பின் ஸலமா —> அம்மார் பின் அபூஅம்மார் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் மேற்கண்ட செய்தியுடன் “தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்” என்று அறிவிக்கும் செய்தி பற்றியும் எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம் கேட்டேன்.
அதற்கவர்கள், “இந்த இரண்டு செய்திகளும் சரியானவை அல்ல; அம்மார் பின் அபூஅம்மார் அறிவிக்கும் செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்று என்பதே உண்மையாகும். அம்மார் பலமானவர் ஆவார். (முஹம்மது பின் அம்ர் இடம்பெறும்) மற்றொரு செய்தி சரியானதல்ல” என்று பதிலளித்தார்கள்.
إِذا سمِع أحدُكُمُ النِّداء ، والإِناءُ على يدِهِ فلا يضعهُ حتّى يقضِي حاجتهُ مِنهُ.
قُلتُ لأبِي : وروى روحٌ أيضًا عن حمّادٍ ، عن عمّارِ بنِ أبِي عمّارٍ ، عن أبِي هُريرة ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم مِثلهُ ، وزاد فِيهِ : وكان المُؤذِّنُ يُؤذِّنُ إِذا بزغ الفجرُ.
قال أبِي : هذينِ الحدِيثينِ ليسا بِصحِيحينِ : أمّا حدِيثُ عمار ، فعن أبِي هُريرة موقُوفٌ وعمّارٌ ثِقةٌ. والحدِيثُ الآخرُ ليس بِصحِيحٍ.
7369.
قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَذَّنَ الْمُؤَذِّنُ، وَالْإِنَاءُ عَلَى يَدِي، وَأَنَا أُرِيدُ الصَّوْمَ؟ قَالَ: «اشْرَبْ»
14755.
سَأَلْتُ جَابِرًا عَنِ الرَّجُلِ يُرِيدُ الصِّيَامَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ لِيَشْرَبَ مِنْهُ، فَيَسْمَعُ النِّدَاءَ، قَالَ جَابِرٌ: كُنَّا نُحَدَّثُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لِيَشْرَبْ»
8020. ஹதீஸ் எண்-8019 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
ரவ்ஹு பின் உபாதாவிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் அஹ்மத் அர்ரியாஹீ என்பவர் மேற்கண்ட செய்தியுடன் “அப்போது தொழுகை அறிவிப்பாளர்கள் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்கள்” என்ற கூடுதலான வாசகத்தை அறிவித்துள்ளார்.
ஹம்மாத் பின் ஸலமாவிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளனர்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட செய்திகளை சரியானவை என்று ஏற்றுக் கொண்டாலும் அதிகமான மார்க்க அறிஞர்களின் பார்வையில் அதற்கு பின்வருமாறு பொருள் கூறப்படுகிறது:
அதாவது “(ஸஹர் நேரத்தில்) அறிவிப்புச் செய்பவர் ஃபஜ்ர் உதயமாவதற்கு முன்பே அறிவிப்புச் செய்து கொண்டிருந்தார் என்பதையும், அப்போது தண்ணீர் அருந்துவது ஃபஜ்ர் நேரத்திற்கு சற்று முன்னதாகவே நிகழ்ந்து விடும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள்” என்று இதை புரிந்துக் கொள்ளலாம்.
“அப்போது தொழுகை அறிவிப்பாளர்கள் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்கள்” என்ற வாசகம் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் கூறிய வாசகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதன்படி இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தியாகிவிடும்.
مِثْلَهُ ,
قَالَ الرِّيَاحِيُّ فِي رِوَايَتِهِ وَزَادَ فِيهِ: وَكَانَ الْمُؤَذِّنُونَ يُؤَذِّنُونَ إِذَا بَزَغَ الْفَجْرُ.
وَكَذَلِكَ رَوَاهُ غَيْرُهُ عَنْ حَمَّادٍ،
8019. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ
1552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட செய்தி முஸ்லிம் இமாமின் நிபந்தனைப்படி உள்ள செய்தியாகும். புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்யவில்லை.
«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعُهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»
740. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட செய்தி முஸ்லிம் இமாமின் நிபந்தனைப்படி உள்ள செய்தியாகும். புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்யவில்லை.
«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ، وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعُهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»
சமீப விமர்சனங்கள்