Author: Abdul Hakkim

Shuabul-Iman-9767

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9767.

 

 


பைஹகீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் தான் (இப்னு அபுத்துன்யா அவர்களின்) கிஸருல் அமல் என்ற நூலில் நான் பார்த்தேன். மேலும் இப்னு அபுத்துன்யா அவர்களிடமிருந்து மற்றவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளனர். என்றாலும் இந்தச் செய்தி (இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது) தவறாகும்.

பின்வரும் ஹதீஸ் எண்-9768 இல் வரும் செய்தி தான் இந்த அறிவிப்பாளர்தொடர் வழியாக அறியப்பட்டுள்ளது.


قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ , شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شُغُلُكَ , وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ “


Tirmidhi-2304

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2304.


«نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالفَرَاغُ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ،


Kubra-Nasaayi-11832

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11832.


قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتِكَ قَبْلَ مَوْتِكَ “


Musannaf-Ibn-Abi-Shaybah-34319

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

34319. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு அறிவுரை கூறும் போது கூறினார்கள்:

ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்பு ஐந்து விஷயங்களை நீ பயன்படுத்திக்கொள்!

1 . உனக்கு மரணம் வருவதற்கு முன்பு உனது வாழ்க்கை.
2 . உனக்கு வேலைப்பளு வருவதற்கு முன்பு உனது ஓய்வு.
3 . வறுமை வருவதற்கு முன்பு உனது செல்வம்.
4 . முதுமை வருவதற்கு முன்பு உனது இளமை.
5 . நோய் வருவதற்கு முன்பு உனது ஆரோக்கியம்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شَغْلِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَشَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ “


Tirmidhi-3974

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3974. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தேவையைத் தம் இறைவனிடமே கேட்கட்டும். எந்த அளவிற்கெனில் உப்பையும் அவனிடமே கேட்கட்டும். தன் செருப்பு வார் அறுந்தாலும் அவனிடமே கேட்கட்டும்.

அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ (ரஹ்)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதுவே (இதற்கு முன் வந்துள்ள) கதன் பஸரீ அறிவிக்கும் ஹதீஸ் எண்-3973 ஐ விட மிகச் சரியானது ஆகும்.


«لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ حَتَّى يَسْأَلَهُ المِلْحَ، وَحَتَّى يَسْأَلَهُ شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ»


Tirmidhi-3973

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

3973. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தேவையைத் தம் இறைவனிடமே கேட்கட்டும். எந்தளவுக்கெனில் தன் செருப்பு வார் அறுந்தாலும் அவனிடமே கேட்க வேண்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இந்தச் செய்தியை பலரும் ஜஅஃபர் பின் ஸுலைமான் —> ஸாபித் அல்புனானீ —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். அவர்கள் இதில் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களைக் குறிப்பிடவில்லை.


«لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ كُلَّهَا حَتَّى يَسْأَلَ شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ»


Tirmidhi-3970

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

3970. அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொள்வது, அழகிய முறையில் அவனை வணங்குவதில் அடங்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தி ஆகும்.

 


«إِنَّ حُسْنَ الظَّنِّ بِاللَّهِ مِنْ حُسْنِ عِبَادَةِ اللَّهِ»


Tirmidhi-3971

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

3971. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தான் விரும்புவது என்ன என்பது குறித்து நன்கு சிந்திக்கவும்.  ஏனெனில் அவருடைய விருப்பத்திலிருந்து அவருக்காகப் பதிவு செய்யப்படுவது பற்றி அவருக்குத் தெரியாது.

அறிவிப்பவர்: அபூஸலமா (ரஹ்)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.


«لِيَنْظُرَنَّ أَحَدُكُمْ مَا الَّذِي يَتَمَنَّى فَإِنَّهُ لَا يَدْرِي مَا يُكْتَبُ لَهُ مِنْ أُمْنِيَّتِهِ»


Hakim-7865

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7865. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், நயவஞ்சகனை “ஸய்யிதே-தலைவரே” என்று அழைத்தால் அவர் தனது இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டார்.

அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் சரியானது. ஆனால் இதை புகாரியும் முஸ்லிமும் தங்கள் நூல்களில் பதிவு செய்யவில்லை.


 


«إِذَا قَالَ الرَّجُلُ لِلْمُنَافِقِ يَا سَيِّدُ فَقَدْ أَغْضَبَ رَبَّهُ تَبَارَكَ وَتَعَالَى»


Abu-Dawood-4977

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4977. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நயவஞ்சகனை “ஸய்யித்-தலைவர்” என்று அழைக்காதீர்கள். ஏனெனில், அவன் தலைவனாக இருந்தால், நீங்கள் உங்கள் இறைவனுக்குக் கோபத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.

அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)


«لَا تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدٌ، فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّدًا فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ عَزَّ وَجَلَّ»


Next Page » « Previous Page