Author: Abdul Hakkim
raavi-45291-மம்தூர் அஸ்வத்-அபூஸல்லாம்
Ibn-Majah-280
பாடம்:
உளூச் செய்வது இறைநம்பிக்கையில் பாதி.
280. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உளூவை முழுமையாகச் செய்வது இறைநம்பிக்கையில் பாதியாகும். ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) எனக் கூறுவது (மறுமையில் நன்மைகளின்) தராசை நிரப்பும். ‘ஸுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்), ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) ஆகிய துதிச் சொற்கள் வானங்கள் மற்றும் பூமிக்கு இடைப்பட்ட பகுதியை நிரப்பும்.
தொழுகை ஒரு பிரகாசம் (ஒளி) ஆகும்; ஸகாத் ஒரு சான்றாகும்; பொறுமை ஒரு வெளிச்சமாகும்; குர்ஆன் உமக்கு ஆதரவான அல்லது உமக்கு எதிரான சாட்சியமாகும்.
மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (அல்லாஹ்விடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.
அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)
«إِسْبَاغُ الْوُضُوءِ شَطْرُ الْإِيمَانِ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءُ الْمِيزَانِ، وَالتَّسْبِيحُ وَالتَّكْبِيرُ مِلْءُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ، وَالزَّكَاةُ بُرْهَانٌ، وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ، كُلُّ النَّاسِ يَغْدُو، فَبَائِعٌ نَفْسَهُ، فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا»
Nasaayi-2437
2437. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உளூவை முழுமையாகச் செய்வது இறைநம்பிக்கையில் பாதியாகும்.
‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்பது (நன்மையால்) தராசை நிரப்பும். ‘ஸுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூய்மையானவன்) மற்றும் ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) ஆகிய துதிகள் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள இடைவெளிகளை நிரப்பும்.
தொழுகை ஒரு பிரகாசமாகும். ஜகாத் ஓர் ஆதாரமாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும்.
குர்ஆன் உமக்கு ஆதரவாக அல்லது உமக்கு எதிராக சாட்சியமாகும்.
அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)
«إِسْبَاغُ الْوُضُوءِ شَطْرُ الْإِيمَانِ، وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَالتَّسْبِيحُ وَالتَّكْبِيرُ يَمْلَأُ السَّمَوَاتِ وَالْأَرْضَ، وَالصَّلَاةُ نُورٌ، وَالزَّكَاةُ بُرْهَانٌ، وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ»
raavi-10157-ஜுரய்யு பின் குலைப் அல்பஸரீ
raavi-37054-இப்னு அபூ ஃபுதைக்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
raavi-19943-ளஹ்ஹாக் பின் உஸ்மான்-அபூஉஸ்மான்
Ibn-Majah-3148
3148. ஹுதைஃபா பின் அஸீத்-அபூஸரீஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிவழியைப் பற்றி நான் அறிந்து கொண்ட பின்னர் என் குடும்பத்தார் என்னை (குர்பானியில்) சுருக்கிக் கொள்வதையே கட்டாயப்படுத்தினர். (முன்னர் நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) ஒரு குடும்பத்தார் ஒரு ஆடு அல்லது இரண்டு ஆடுகளை மட்டுமே குர்பானி கொடுத்து வந்தனர். ஆனால் இப்போது (அதிகமாக கொடுக்காததால்) எங்கள் அண்டை வீட்டார் எங்களை கஞ்சர்கள் என எண்ணுகின்றனர்.
«حَمَلَنِي أَهْلِي عَلَى الْجَفَاءِ بَعْدَ مَا عَلِمْتُ مِنَ السُّنَّةِ، كَانَ أَهْلُ الْبَيْتِ يُضَحُّونَ، بِالشَّاةِ وَالشَّاتَيْنِ، وَالْآنَ يُبَخِّلُنَا جِيرَانُنَا»
சமீப விமர்சனங்கள்