ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 61
ஜவ்ரபின் மீது மஸஹ் செய்தல்.
(ஜவ்ரப் என்பது காலுறைக்கு மேல் அணியக்கூடிய கரண்டைக்கு மேல் உயரமான பெரிய காலணியாகும்)
159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். அவர்கள் (சில சமயங்களில்) ஜவ்ரபின் மீதும், (சில சமயங்களில்) செருப்புகள் மீதும் மஸ்ஹு செய்தார்கள்.
அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள்
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
அப்துர் ரஹ்மான் பின் மஹ்திய்யா அவர்கள் இந்த ஹதீஸை அறிவிப்பதில்லை. காரணம் முகீரா (ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படும் தெளிவான ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் காலுறை மீது மஸ்ஹு செய்தார்கள் என்பது தான்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
நபி (ஸல்) அவர்கள் ஜவ்ரபின் மீது மஸ்ஹு செய்தார்கள் என்று மீண்டும் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூமூஸா அல் அஸ்அரீ அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது. ஆனால் தொடர்பு அறுந்ததாகவும் பலமற்றதாகவும் உள்ளது.
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ، وَالنَّعْلَيْنِ»
சமீப விமர்சனங்கள்