Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-147

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

147. வண்ணக்கோடுகள் போடப்பட்ட தலைப்பாகை அணிந்து கொண்டு ரஸுல் (ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன்.

(குறிப்பு : அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூமஃகல் அவர்கள் ஹதீஸ் கலையில் யாரென்றே அறியப்படாதவர்.)


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ وَعَلَيْهِ عِمَامَةٌ قِطْرِيَّةٌ، فَأَدْخَلَ يَدَهُ مِنْ تَحْتِ الْعِمَامَةِ فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ وَلَمْ يَنْقُضِ الْعِمَامَةَ»


Abu-Dawood-146

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 57

தலைப் பாகையில் மஸஹ் செய்தல்.

146. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சிறு படையை அனுப்பினார்கள். (அவர்கள் சென்ற இடத்தில்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த(தும் முறையிட்டனர். அப்)போது அவர்களது தலைப்பாகைகளிலும், காலுறைகளிலும் மஸஹ் செய்து கொள்ள அனுமதித்தார்கள் என சவ்பான் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : இதன் அறிவிப்பாளர் தொடரில் சவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராஷித் பின் ஸஃது அவர்கள் சவ்பான் (ரலி) அவர்களுக்கு முன்னரே மரணித்து விட்டார். எனவே, அவர்களிடம் கேட்டிருக்க முடியாது என இமாம் நஸயீ, திர்மிதீ, அஹ்மத், ஹாகிம், தாரகுத்னீயில் இடம் பெற்றுள்ளது. எனவே இது ஏற்றுக் கொள்ளத்தக்க ஹதீஸ் அல்ல என ஆகிவிடுகிறது.)


«بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيَّةً، فَأَصَابَهُمُ الْبَرْدُ فَلَمَّا قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُمْ أَنْ يَمْسَحُوا عَلَى الْعَصَائِبِ وَالتَّسَاخِينِ»


Abu-Dawood-145

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம் : 56

தாடியை கோதி விடுதல்.

145. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்யும் போது ஒரு கையளவு தண்ணீர் எடுத்து தமது முகவாய்க் கட்டைக்குக் கீழே அதைச் செலுத்தி தமது தாடியைக் கோதி விடுவார்கள். மேலும் எனது இறைவன் எனக்கு இவ்வாறு தான் கட்டளையிட்டுள்ளான் எனவும் கூறினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : திர்மிதீ, இப்னுமாஜா, இப்னு குஸைமா, ஹாகிம், தாரகுத்னீ, இப்னு ஹிப்பான் போன்ற நூல்களிலும் தாடியைக் கோதிக் கழுவுவது பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. எனினும் இவற்றில் எந்த ஹதீஸுமே ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல. இமாம் புகாரி அவர்கள் திர்மிதீயில் இடம் பெறும் 31-வது ஹதீஸை ஏற்றுக் கொள்ளத்தக்க (ஹஸன்) ஹதீஸ் எனக் குறிப்பிடுகிறார்கள். மேற்கண்ட ஹதீஸில் இடம் பெறும் அல்வலீத் பின் ஸவ்ரான் யாரென்றே அறியப்படாதவர்.)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا تَوَضَّأَ، أَخَذَ كَفًّا مِنْ مَاءٍ فَأَدْخَلَهُ تَحْتَ حَنَكِهِ فَخَلَّلَ بِهِ لِحْيَتَهُ»، وَقَالَ: «هَكَذَا أَمَرَنِي رَبِّي عَزَّ وَجَلَّ»


Abu-Dawood-144

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

144. மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. அதில் நீ உலூச் செய்யும் போது வாய் கொப்பளி என்பது மேலதிகமாக வந்துள்ளது.


«إِذَا تَوَضَّأْتَ فَمَضْمِضْ»


Abu-Dawood-143

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

143. மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. அதில் நாங்கள் சென்று அமர்ந்திருக்க மாட்டோம். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் வேகமாக அடியெடுத்து வைத்து இருபக்கமாகவும் சாய்ந்து சாய்ந்து நடந்து வந்து விட்டார்கள் என்றும், கஸீரா என்ற உணவு தயாரிக்கப்பட்டது என்ற இடத்தில் அஸீதா என்ற உணவு தயாரிக் கப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

(குறிப்பு : இறைச்சி, மாவு, தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் உணவு கஸீரா எனப்படும். இறைச்சி இல்லாமல் மாவு, தண்ணீரால் தயாரிக்கப்படும் உணவு கஸீதா எனப்படும்.)


فَلَمْ يَنْشَبْ أَنْ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَتَقَلَّعُ يَتَكَفَّأُ، وَقَالَ: عَصِيدَةٌ، مَكَانَ خَزِيرَةٍ.


Abu-Dawood-142

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

142. பனூ முன்தஃபிக் கூட்டத்தினரின் சார்பில் தூதராக நபி (ஸல்) அவர்களிடம் நான் வந்திருந்தேன். (அல்லது அத்தூதுக் குழுவில் ஒருவனாக இருந்தேன்.) நாங்கள் வந்தபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை அவர்களது இல்லத்தில் காணவில்லை. ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களைக் கண்டோம். அவர்கள் எங்களுக்கு கஸீரா என்ற உணவைத் தயாரிக்க உத்தரவிட்டார்கள். அது தயாரிக்கப்பட்டு விட்டது. பின்னர், எங்களுக்கு பேரீத்தம் பழங்கள் அடங்கிய தட்டு கொண்டு வரப்பட்டது.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, நீங்கள் ஏதாவது சாப்பிட்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் ஆம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்று பதில் அளித்தோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும் போது அவர்களின் ஆடு மேய்ப்பாளர் நபி (ஸல்) அவர்களுக்குச் சொந்தமான ஆடுகளை கொட்டடிக்கு ஓட்டிச் சென்றார். அவரிடம் அப்போது தான் பிறந்த ஆட்டுக் குட்டியும் சப்தமிட்டுக் கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவரிடம் என்னப்பா! நமது ஆடு என்ன குட்டி ஈன்று உள்ளது? என்று கேட்டார்கள். அதற்கு அவர் விட் காரண்தால்) அதற்கு பதிலாக நமது ஆடுகளில் ஒன்றை அறுப்பீராக! என்று

كُنْتُ وَافِدَ بَنِي الْمُنْتَفِقِ – أَوْ فِي وَفْدِ بَنِي الْمُنْتَفِقِ – إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَلَمَّا قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ نُصَادِفْهُ فِي مَنْزِلِهِ، وَصَادَفْنَا عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ، قَالَ: فَأَمَرَتْ لَنَا بِخَزِيرَةٍ فَصُنِعَتْ لَنَا، قَالَ: وَأُتِينَا بِقِنَاعٍ – وَلَمْ يَقُلْ قُتَيْبَةُ: الْقِنَاعَ، وَالْقِنَاعُ: الطَّبَقُ فِيهِ تَمْرٌ – ثُمَّ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَلْ أَصَبْتُمْ شَيْئًا؟ – أَوْ أُمِرَ لَكُمْ بِشَيْءٍ؟» قَالَ: قُلْنَا: نَعَمْ، يَا رَسُولَ اللَّهِ، قَالَ: فَبَيْنَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُلُوسٌ، إِذْ دَفَعَ الرَّاعِي غَنَمَهُ إِلَى الْمُرَاحِ، وَمَعَهُ سَخْلَةٌ تَيْعَرُ، فَقَالَ: «مَا وَلَّدْتَ يَا فُلَانُ؟»، قَالَ: بَهْمَةً، قَالَ: «فَاذْبَحْ لَنَا مَكَانَهَا شَاةً»، ثُمَّ قَالَ: ” لَا تَحْسِبَنَّ وَلَمْ يَقُلْ: لَا تَحْسَبَنَّ أَنَّا مِنْ أَجْلِكَ ذَبَحْنَاهَا، لَنَا غَنَمٌ مِائَةٌ لَا نُرِيدُ أَنْ تَزِيدَ، فَإِذَا وَلَّدَ الرَّاعِي بَهْمَةً، ذَبَحْنَا مَكَانَهَا شَاةً ” قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي امْرَأَةً وَإِنَّ فِي لِسَانِهَا شَيْئًا – يَعْنِي الْبَذَاءَ – قَالَ: «فَطَلِّقْهَا إِذًا»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ لَهَا صُحْبَةً، وَلِي مِنْهَا وَلَدٌ، قَالَ: ” فَمُرْهَا يَقُولُ: عِظْهَا فَإِنْ يَكُ فِيهَا خَيْرٌ فَسَتَفْعَلْ، وَلَا تَضْرِبْ ظَعِينَتَكَ كَضَرْبِكَ  أُمَيَّتَكَ ” فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي، عَنِ الْوُضُوءِ، قَالَ: «أَسْبِغِ الْوُضُوءَ، وَخَلِّلْ بَيْنَ الْأَصَابِعِ، وَبَالِغْ فِي الِاسْتِنْشَاقِ إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا»


Abu-Dawood-141

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

141. நீங்கள் (உலூச் செய்யும் போது) இரண்டு முறையோ அல்லது மூன்று முறை களோ தண்ணீரை நன்கு செலுத்தி மூக்கை சிந்தி சுத்தம் செய்யுங்கள் என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : இப்னுமாஜா, அஹ்மத், ஹாகிம் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)


«اسْتَنْثِرُوا مَرَّتَيْنِ بَالِغَتَيْنِ أَوْ ثَلَاثًا»


Abu-Dawood-140

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 55

நாசிக்கு தண்ணீர் செலுத்தி மூக்கை சுத்தம் செய்தல்.

140. உங்களில் ஒருவர் உலூச் செய்யும் போது அவர் தன் நாசிக்கு தண்ணீர் செலுத்தி மூக்கைச் சிந்தி சுத்தம் செய்யவும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.


«إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ مَاءً ثُمَّ لِيَنْثُرْ»


Abu-Dawood-139

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 54

வாய் கொப்பளிப்பதையும் மூக்கை சுத்தம் செய்வதையும் தனித்தனியாகச் செய்தல்.

139. நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது உலூச் செய்து கொண்டிருந்த அவர்களின் முகம் மற்றும் தாடியிலிருந்து தண்ணீர் மார்பில் வழிந்தோடக் கண்டேன். அவர்கள் வாய் கொப்பளிப்பதற்கும் நாசிக்கும் தண்ணீர் செலுத்தி மூக்கை சுத்தம் செய்யவும் தனித்தனியாகத் தண்ணீர் எடுக்கக் கண்டேன் என தல்ஹா (ரலி) அவர்கள் தமது தந்தை கூறியதாக பாட்டனாரி டமிருந்து அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : இது பலவீனமான ஹதீஸ். அறிவிப்பாளர் தல்ஹா (ரலி) அவர்களின் தந்தை முஸர்ரிஃப் அவர்கள் ஹதீஸ் கலையில் யாரென்றே அறியப்படாதவர். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் லைஸ் பின் அபீஸலீம் பலவீனமானவர் ஹதீஸ் எண் 132 இன் குறிப்பு பார்க்க.)


«دَخَلْتُ – يَعْنِي – عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَتَوَضَّأُ، وَالْمَاءُ يَسِيلُ مِنْ وَجْهِهِ وَلِحْيَتِهِ عَلَى صَدْرِهِ، فَرَأَيْتُهُ يَفْصِلُ بَيْنَ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ»


Abu-Dawood-138

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 53

உறுப்புக்களை ஒரு தடவை மட்டும் கழுவி உளூச் செய்தல்.

138. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உலூச் செய்யும் முறையை உங்களுக்குத் தெரிவிக்கவா? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டுவிட்டு ஒவ்வொரு உறுப்பையும் ஒரு தடவை மட்டும் கழுவி உலூச் செய்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அதாஃ பின் யஸார் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, அஹ்மது, நஸயீ, இப்னுமாஜரி, திர்மிதீ ஆகியவற்றிலும் இடம் பெற்றுள்ளது.)


أَلَا أُخْبِرُكُمْ بِوُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً»


Next Page » « Previous Page