Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-4334

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4334. பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய் கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ ثَلَاثُونَ كَذَّابًا دَجَّالًا، كُلُّهُمْ يَكْذِبُ عَلَى اللَّهِ، وَعَلَى رَسُولِهِ»


Abu-Dawood-4333

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4333. பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ ثَلَاثُونَ دَجَّالُونَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ»


Abu-Dawood-2373

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2373.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ مُحْرِمٌ»


Abu-Dawood-2368

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2368.


أَنَّ شَدَّادَ بْنَ أَوْسٍ، بَيْنَمَا هُوَ يَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ نَحْوَهُ


Abu-Dawood-2522

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(ஷஹீத்) உயிர்த்தியாகியின் பரிந்துரை ஏற்கப்படும்.

2522. நிம்ரான் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (தந்தையை இழந்த) அனாதைகளாக உம்முத்தர்தா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், “ஒரு நற்செய்தியை தெரிந்துக்கொள்ளுங்கள்”. (மறுமை நாளில் ஷஹீது எனும்) ஓரு உயிர்த்தியாகி தமது குடும்பத்தாரில் எழுபது பேருக்கு பரிந்துரை செய்வார். அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று (எனது கணவர்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இதில் இடம்பெறும் வலீத் பின் ரபாஹ் அத்திமாரீ என்ற பெயர் ரபாஹ் பின் வலீத் என்பதே சரியாகும்.


دَخَلْنَا عَلَى أُمِّ الدَّرْدَاءِ وَنَحْنُ أَيْتَامٌ، فَقَالَتْ: أَبْشِرُوا، فَإِنِّي سَمِعْتُ أَبَا الدَّرْدَاءَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُشَفَّعُ الشَّهِيدُ فِي سَبْعِينَ مِنْ أَهْلِ بَيْتِهِ»


Abu-Dawood-850

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 287

இரு ஸஜ்தாக்களுக்கு இடையே கூறவேண்டிய பிரார்த்தனை.

850. நபி (ஸல்) அவர்கள், இரு ஸஜ்தாக்களுக்கு இடையே உள்ள இருப்பில், “அல்லாஹும்மஃக்ஃபிர்லீ, வர்ஹம்னீ, வ ஆஃபினீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ

(பொருள்: அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு உடல் நலத்தை தருவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்கு உணவு வழங்குவாயாக!) என்று பிரார்த்தனை செய்வார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَعَافِنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي»


Abu-Dawood-2369

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2369. …”இரத்தம் குத்தி எடுத்தவரும், எடுக்கப் பட்டவரும் நோன்பை விட்டுவிட்டார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى عَلَى رَجُلٍ بِالْبَقِيعِ، وَهُوَ يَحْتَجِمُ، وَهُوَ آخِذٌ بِيَدِي لِثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ، فَقَالَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»


Next Page » « Previous Page