ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
6087. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘நான் அழிந்துவிட்டேன்; நான் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக் கொண்டு) என் மனைவியுடன் புணர்ந்துவிட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்வீராக’ என்றார்கள். அவர், ‘என்னிடம் அடிமை இல்லை’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்பீராக’ என்றார்கள். அவர், ‘எனக்கு சக்தியில்லை’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் அறுபது ஏழைகளக்கு உணவளிப்பீராக’ என்று கூறினார்கள். அவர், ‘என்னிடம் ஏதுமில்லை’ என்றார் அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ‘அரக்’ கொண்டு வரப்பட்டது. அதில் பேரீச்சம்பழம் இருந்தது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அரக்’ என்பது (15ஸாஉ பிடிக்கும்) ஒரு முகத்தலளவை ஆகும்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘கேள்வி கேட்டவர் எங்கே?’ என்று கேட்க, அவர் வந்தார். அவரிடம்) ‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!’ என்றார்கள். அந்த
أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: هَلَكْتُ، وَقَعْتُ عَلَى أَهْلِي فِي رَمَضَانَ، قَالَ: «أَعْتِقْ رَقَبَةً» قَالَ: لَيْسَ لِي، قَالَ: «فَصُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ» قَالَ: لاَ أَسْتَطِيعُ، قَالَ: «فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا» قَالَ: لاَ أَجِدُ، فَأُتِيَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ – قَالَ إِبْرَاهِيمُ: العَرَقُ المِكْتَلُ – فَقَالَ: «أَيْنَ السَّائِلُ، تَصَدَّقْ بِهَا» قَالَ: عَلَى أَفْقَرَ مِنِّي، وَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنَّا، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ، قَالَ: «فَأَنْتُمْ إِذًا»
சமீப விமர்சனங்கள்