Category: நஸாயி

Nasaayi-3660

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

ஸுஃப்யான் (ரஹ்) அவர்களின் மாறுபட்ட அறிவிப்புகள்.

3660. என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதை அவரின் சார்பாக நீர் நிறைவேற்றுவீராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ اسْتَفْتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ؟ فَقَالَ: «اقْضِهِ عَنْهَا»


Nasaayi-3659

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3659. என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், அதை அவரின் சார்பாக நீர் நிறைவேற்றுவீராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


اسْتَفْتَى سَعْدٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْضِهِ عَنْهَا»


Nasaayi-3661

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3661. என்னுடைய தாயார் மீது ஒரு நேர்ச்சை கடமையாக இருந்த நிலையில் அவர் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதை அவரின் சார்பாக நான் நிறைவேற்றவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


مَاتَتْ أُمِّي وَعَلَيْهَا نَذْرٌ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَأَمَرَنِي أَنْ أَقْضِيَهُ عَنْهَا»


Nasaayi-3658

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3658. என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதை அவரின் சார்பாக நீர் நிறைவேற்றுவீராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّهُ اسْتَفْتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، فَمَاتَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْضِهِ عَنْهَا»


Nasaayi-3657

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3657. என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதை அவரின் சார்பாக நீர் நிறைவேற்றுவீராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّهُ اسْتَفْتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْضِهِ عَنْهَا»


Nasaayi-3656

ஹதீஸின் தரம்: Pending

3656. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து “என்னுடைய தாயார் அவர் மீது ஒரு நேர்ச்சை கடமையாக இருந்த நிலையில் (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் அடிமையை உரிமைவிட்டால் அது செல்லுபடியாகுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (ஆம்) அவர் சார்பாக நீ அடிமையை உரிமை விடு! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ، أَفَيُجْزِئُ عَنْهَا أَنْ أُعْتِقَ عَنْهَا؟ قَالَ: «أَعْتِقْ عَنْ أُمِّكَ»


Nasaayi-3665

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3665. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதரே! ‘எது சிறந்த தர்மம்?’ என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ»


Nasaayi-3664

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3664. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டேன். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قُلْتُ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ»


Nasaayi-3650

ஹதீஸின் தரம்: Pending

3650. ஷுரஹ்பீல் பின் ஸயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போருக்கு சென்றுவிட்டார்கள். மதீனாவில் இருந்த அவர்களின் தாயாருக்கு மரணவேளை ஏற்பட்ட போது அவர்களிடம் தர்மம் செய்வதற்கு வஸிய்யத் செய்யுங்கள் என்று கூறப்பட்டது. அதற்கு அவர், செல்வம் ஸஅதுக்கு சொந்தமானது. நான் எதில் நான் வஸிய்யத் செய்வது என்று மறுத்துவிட்டார். ஸஅது அவர்கள் வருவதற்குள் அவர் இறந்துவிட்டார். ஸஅது அவர்கள் வந்தபின் இது பற்றி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

எனவே ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நான் என் தாயாரின் சார்பாக தர்மம் செய்வது அவருக்கு பயனளிக்குமா? என்று  நபி அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள். எனவே ஸஅது அவர்கள் இன்னின்ன தோட்டங்கள் அவரின் நன்மைக்காக தர்மம் செய்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.


خَرَجَ سَعْدُ بْنُ عُبَادَةَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ، وَحَضَرَتْ أُمَّهُ الْوَفَاةُ بِالْمَدِينَةِ، فَقِيلَ لَهَا: أَوْصِي، فَقَالَتْ: فِيمَ أُوصِي؟ الْمَالُ مَالُ سَعْدٍ، فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ يَقْدَمَ سَعْدٌ، فَلَمَّا قَدِمَ سَعْدٌ ذُكِرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ يَنْفَعُهَا أَنْ أَتَصَدَّقَ عَنْهَا؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ»، فَقَالَ سَعْدٌ: حَائِطُ كَذَا وَكَذَا صَدَقَةٌ عَنْهَا، لِحَائِطٍ سَمَّاهُ


Nasaayi-3666

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3666. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களின் தாய் இறந்து விட்டார். எனவே அவர், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டார். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மதீனாவில் இருக்கும் இந்த தண்ணீர் பிடிக்கும் இடம் ஸஅது பின் உபாதா (ரலி) ஏற்பாடு செய்ததாகும்.

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)


أَنَّ أُمَّهُ مَاتَتْ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي مَاتَتْ، أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ» فَتِلْكَ سِقَايَةُ سَعْدٍ بِالْمَدِينَةِ


Next Page » « Previous Page