Category: திர்மிதீ

Tirmidhi-2055

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2055.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தவறான முறையில்) ஓதிப் பார்க்கிறவர் அல்லது சூடுபோட்டுக் கொள்பவர் (அல்லாஹ்வின் மீது) நம்பிக்கை வைப்பதை விட்டும் விலகி விட்டார்.

அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஃபா (ரலி)


«مَنْ اكْتَوَى أَوْ اسْتَرْقَى فَقَدْ بَرِئَ مِنَ التَّوَكُّلِ»


Tirmidhi-1756

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1756.

அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் விட்டு ஒருநாள் தலைவாருவதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி)  தலைவாருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامٍ، عَنِ الحَسَنِ بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ


Tirmidhi-1080

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அத்தியாயம்: 9

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள திருமணம் பற்றிய செய்திகள்.

பாடம்:

திருமணம் செய்வதின் சிறப்பு பற்றியும், அதை வலியுறுத்தியும் வந்துள்ள செய்திகள்.

1080. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை

1 . வெட்கம்.

2 . வாசனை திரவியம் பூசுவது.

3 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது)

4 . திருமணம் செய்வது.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தப் பாடப் பொருளில் உஸ்மான் (ரலி), ஸவ்பான் (ரலி), இப்னு மஸ்வூத் (ரலி), ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபூநஜீஹ் (ரலி), ஜாபிர் (ரலி), அக்காஃப் (ரலி) ஆகியோர் வழியாகவும் ஹதீஸ்கள் வந்துள்ளன.

அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் (மேற்கண்ட) செய்தி ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இந்த செய்தி வேறு சில அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது. அவற்றில் மக்ஹூல் அவர்களுக்கும், அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்குமிடையில் அபுஷ்ஷிமால் என்பவர் இடம்பெறவில்லை.

அபுஷ்ஷிமாலை கூறி அறிவிக்கும் ஹஃப்ஸ், அப்பாத் பின் அவ்வாம் ஆகியோர் அறிவிக்கும் செய்தியே மிகச் சரியானதாகும்.


أَرْبَعٌ مِنْ سُنَنِ المُرْسَلِينَ: الحَيَاءُ، وَالتَّعَطُّرُ، وَالسِّوَاكُ، وَالنِّكَاحُ

وَفِي البَاب عَنْ عُثْمَانَ، وَثَوْبَانَ، وَابْنِ مَسْعُودٍ، وَعَائِشَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَأَبِي نَجِيحٍ، وَجَابِرٍ، وَعَكَّافٍ.: «حَدِيثُ أَبِي أَيُّوبَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ».

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ العَوَّامِ، عَنِ الحَجَّاجِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي الشِّمَالِ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ حَدِيثِ حَفْصٍ.

وَرَوَى هَذَا الحَدِيثَ هُشَيْمٌ، وَمُحَمَّدُ بْنُ يَزِيدَ الوَاسِطِيُّ، وَأَبُو مُعَاوِيَةَ، وَغَيْرُ وَاحِدٍ، عَنِ الحَجَّاجِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي أَيُّوبَ،

«وَلَمْ يَذْكُرُوا فِيهِ، عَنْ أَبِي الشِّمَالِ، وَحَدِيثُ حَفْصِ بْنِ غِيَاثٍ وَعَبَّادِ بْنِ العَوَّامِ أَصَحُّ»


Tirmidhi-3173

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அத்தியாயம்: 23

அல்முஃமினூன் (நம்பிக்கை கொண்டோர்)

3173. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும் போது, அவர்களின் முகத்துக்கருகே தேனீயின் ரிங்காரம் போன்ற (மெல்லிய) சத்தம் கேட்கும். அப்படி ஒரு நாள் அவர்களுக்கு வஹீ வந்தது. (அவர்கள் முன்) நாங்கள் சிறிது நேரம் காத்திருந்தோம்.

(பிறகு வஹீயின் நிலை அவர்களை விட்டு விலகியதும்), அவர்கள் கிப்லாவை முன்னோக்கித் தம் கைகளை உயர்த்தி, “அல்லாஹும்ம ஸித்னா! வலா தன்குஸ்னா! வ அக்ரிம்னா! வலா துஹின்னா! வ அஃத்தினா! வலா தஹ்ரிம்னா! வ ஆஸிர்னா! வலா துஃஸிர் அலைனா! வர்ள அன்னா! வ அர்ளினா! என்று பிரார்த்தனைச் செய்தார்கள்.

(பொருள்: இறைவா! எங்களுக்கு அதிகமாக வழங்கு; குறைத்து விடாதே! எங்களை கண்ணியப்படுத்து; கேவலப்படுத்தி விடாதே! எங்களுக்கு முன்னுரிமை வழங்கு; எங்களை பின்னுக்குத் தள்ளி விடாதே! எங்களை இழப்படைந்தவர்களாக ஆக்கி விடாதே! (உனதருளுக்காக) எங்களை தேர்வு செய்; எங்களை விடுத்து (எங்கள் எதிரிகளைத்) தேர்வு செய்து விடாதே! நீ எங்களுக்கு வழங்கியிருப்பவற்றில் எங்களை மனநிறைவு அடையச் செய்! நீ எங்களைக் குறித்து உவப்புக் கொள்!)

பிறகு, “எனக்கு (இப்போது) பத்து இறைவசனங்கள் அருளப்பட்டன. அவற்றை யார் கடைப்பிடிக்கிறாரோ நிச்சயம்

كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الوَحْيُ سُمِعَ عِنْدَ وَجْهِهِ كَدَوِيِّ النَّحْلِ فَأُنْزِلَ عَلَيْهِ يَوْمًا فَمَكَثْنَا سَاعَةً فَسُرِّيَ عَنْهُ فَاسْتَقْبَلَ القِبْلَةَ وَرَفَعَ يَدَيْهِ وَقَالَ: «اللَّهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا، وَأَكْرِمْنَا وَلَا تُهِنَّا، وَأَعْطِنَا وَلَا تَحْرِمْنَا، وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا، وَارْضِنَا وَارْضَ عَنَّا»، ثُمَّ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْزِلَ عَلَيَّ عَشْرُ آيَاتٍ، مَنْ أَقَامَهُنَّ دَخَلَ الجَنَّةَ»، ثُمَّ قَرَأَ: {قَدْ أَفْلَحَ المُؤْمِنُونَ} [المؤمنون: 1] حَتَّى خَتَمَ عَشْرَ آيَاتٍ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ يُونُسَ بْنِ سُلَيْمٍ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ بِمَعْنَاهُ.


Tirmidhi-67

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

67.


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُسْأَلُ عَنِ المَاءِ يَكُونُ فِي الفَلَاةِ مِنَ الأَرْضِ، وَمَا يَنُوبُهُ مِنَ السِّبَاعِ وَالدَّوَابِّ؟ قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ المَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الخَبَثَ»،


Tirmidhi-3566

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3566.

“அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க”

இதன் பொருள் :
இறைவா! உன் திருப்தியின் மூலம் உன் அதிருப்தியை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உனது மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னை என்னால் முழுமையாகப் புகழ இயலாது. நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து கொண்டாயோ அவ்வாறு இருக்கிறாய்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي وِتْرِهِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَأَعُوذُ بِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»


Tirmidhi-358

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

மக்களின் வெறுப்பிற்குரியவர் தொழுகை நடத்துவது பற்றி வந்துள்ளவை.

358. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூவரை சபித்தார்கள்.

அவர்கள்:

1 . மக்கள் அவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்.

2 . கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்.

3 . (பாங்கு கூறும்போது) ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியை நோக்கி வாருங்கள்) என்பதை செவியேற்றும் அதற்கு பதிலளிக்காதவர்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தப் பாடப் பொருளில் உள்ள செய்தி இப்னு அப்பாஸ் (ரலி), தல்ஹா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகிய நபித்தோழர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அனஸ் (ரலி) வழியாக வரும் இந்த செய்தி சரியானதல்ல. ஏனெனில் இந்த செய்தி ஹஸன் பஸரீ அவர்கள் வழியாக (முர்ஸலாக) நபித்தோழர் விடப்பட்டு வந்துள்ளது. இதில் இடம்பெறும் முஹம்மது பின் அல்காஸிம் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் விமர்சித்துள்ளார். மேலும் இவர் ஹாஃபிள்.. அல்ல.

இந்த செய்தியின் படி, மக்களின் வெறுப்பிற்குள்ளானவர் தொழுகை நடத்துவது வெறுப்பிற்குரிய செயல் என கல்வியாளர்களில் சிலர் கூறியுள்ளனர்.

இமாம், அநியாயக்காரராக இல்லாமல் இருந்து அவரை வெறுத்தால் அதன் குற்றம் வெறுத்தவர்களையேச் சேரும்.

இமாமை ஒருவரோ

لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةً: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَرَجُلٌ سَمِعَ حَيَّ عَلَى الفَلَاحِ ثُمَّ لَمْ يُجِبْ


Tirmidhi-3795

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3795.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அபூபக்ர் சிறந்த மனிதராவார்.


«نِعْمَ الرَّجُلُ أَبُو بَكْرٍ، نِعْمَ الرَّجُلُ عُمَرُ، نِعْمَ الرَّجُلُ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ، نِعْمَ الرَّجُلُ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ، نِعْمَ الرَّجُلُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ، نِعْمَ الرَّجُلُ مُعَاذُ بْنُ جَبَلٍ، نِعْمَ الرَّجُلُ مُعَاذُ بْنُ عَمْرِو بْنِ الجَمُوحِ»


Tirmidhi-3790

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3790.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

…என் சமுதாயத்தில் என் சமுதாயத்தின் மீது அதிக இரக்கமுள்ளவர் அபூபக்ர் ஆவார். அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவர்களில் கடுமையானவர் உமராவார்…


«أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ، وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ، وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ بْنُ عَفَّانَ، وَأَعْلَمُهُمْ بِالحَلَالِ وَالحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَقْرَؤُهُمْ أُبَيُّ بْنُ كَعْبٍ وَلِكُلِّ أُمَّةٍ أَمِينٌ وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ»


Tirmidhi-362

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

362.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயினால் இறந்தார்களோ அந்த நோயின் போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து தொழுதார்கள்.


«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَ أَبِي بَكْرٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ قَاعِدًا»


Next Page » « Previous Page