Author: Farook

Tirmidhi-2229

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

வழிகெடுக்கும் தலைவர்கள்.

2229. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எனது சமுதாயத்தின் விசயத்தில் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கும் தலைவர்களைக் குறித்துதான்.

மேலும் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டே இருப்பார்கள். இறைக் கட்டளை(யான மறுமைநாள்) வரும் வரை அவர்களை தோற்கடிக்க நினைப்போர் தீங்கிழைக்க முடியாமல் அவர்கள் மேலோங்கியவர்களாக இருப்பார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன் ஸஹீஹ் தரமாகும். இந்த செய்தியில் வரும் கூட்டத்தினர் ஹதீஸை உடையவர்கள் (ஹதீஸ்கலை அறிஞர்கள்) என்று அலீ பின் மதீனீ அவர்கள் கூறியதாக புகாரீ இமாம் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.


«إِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الأَئِمَّةَ المُضِلِّينَ»، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الحَقِّ ظَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ يَخْذُلُهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ»


Abu-Dawood-4252

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4252. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன.

நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன். மேலும், “அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே. அவ்வாறு நீ சாட்டினால், அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்துவிடும்” என்றும் பிரார்த்தித்தேன். என் இறைவன், “முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்கமாட்டேன்; எதிரிகள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே

«إِنَّ اللَّهَ زَوَى لِي الْأَرْضَ» – أَوْ قَالَ: – ” إِنَّ رَبِّي زَوَى لِي الْأَرْضَ، فَرَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا، وَإِنَّ مُلْكَ أُمَّتِي سَيَبْلُغُ مَا زُوِيَ لِي مِنْهَا ، وَأُعْطِيتُ الْكَنْزَيْنِ الْأَحْمَرَ وَالْأَبْيَضَ، وَإِنِّي سَأَلْتُ رَبِّي لِأُمَّتِي أَنْ لَا يُهْلِكَهَا بِسَنَةٍ بِعَامَّةٍ، وَلَا يُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ، فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ، وَإِنَّ رَبِّي قَالَ لِي: يَا مُحَمَّدُ، إِنِّي إِذَا قَضَيْتُ قَضَاءً، فَإِنَّهُ لَا يُرَدُّ، وَلَا أُهْلِكُهُمْ بِسَنَةٍ بِعَامَّةٍ، وَلَا أُسَلِّطُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ، فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ، وَلَوِ اجْتَمَعَ عَلَيْهِمْ مِنْ بَيْنِ أَقْطَارِهَا – أَوْ قَالَ بِأَقْطَارِهَا – حَتَّى يَكُونَ بَعْضُهُمْ يُهْلِكُ بَعْضًا، وَحَتَّى يَكُونَ بَعْضُهُمْ يَسْبِي بَعْضًا، وَإِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الْأَئِمَّةَ الْمُضِلِّينَ، وَإِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي لَمْ يُرْفَعْ عَنْهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ، وَحَتَّى تَعْبُدَ قَبَائِلُ مِنْ أُمَّتِي الْأَوْثَانَ، وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي كَذَّابُونَ ثَلَاثُونَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي، وَلَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ – قَالَ ابْنُ عِيسَى: «ظَاهِرِينَ» ثُمَّ اتَّفَقَا – لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ


Darimi-2794

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

வழிகெடுக்கும் தலைவர்கள்.

2794. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எனது சமுதாயத்தின் விசயத்தில் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கும் தலைவர்களைக் குறித்துதான்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


«إِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الْأَئِمَّةَ الْمُضِلِّينَ»


Darimi-215

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

215. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எனது சமுதாயத்தின் விசயத்தில் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கும் தலைவர்களைக் குறித்துதான்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


«إِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الْأَئِمَّةَ الْمُضِلِّينَ»


Musnad-Ahmad-22393

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22393. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எனது சமுதாயத்தின் விசயத்தில் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கும் தலைவர்களைக் குறித்துதான்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


«إِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الْأَئِمَّةَ الْمُضِلِّينَ»


Musnad-Ahmad-17115

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17115. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன.

நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன். மேலும், “அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே! என்றும் பிரார்த்தித்தேன்…

என் இறைவன், “முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்கமாட்டேன்; எதிரிகள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரை கொல்வார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச் சிறைபிடிப்பார்கள்” என்று கூறினான்.

மேலும்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ زَوَى لِي الْأَرْضَ حَتَّى رَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا، وَإِنَّ مُلْكَ أُمَّتِي سَيَبْلُغُ مَا زُوِيَ لِي مِنْهَا، وَإِنِّي أُعْطِيتُ الْكَنْزَيْنِ الْأَبْيَضَ وَالْأَحْمَرَ، وَإِنِّي سَأَلْتُ رَبِّي عَزَّ وَجَلَّ لَا يُهْلِكُ أُمَّتِي بِسَنَةٍ بِعَامَّةٍ، وَأَنْ لَا يُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا فَيُهْلِكَهُمْ بِعَامَّةٍ، وَأَنْ لَا يُلْبِسَهُمْ شِيَعًا، وَلَا يُذِيقَ بَعْضَهُمْ بَأْسَ بَعْضٍ، وَقَالَ: «يَا مُحَمَّدُ إِنِّي إِذَا قَضَيْتُ قَضَاءً، فَإِنَّهُ لَا يُرَدُّ، وَإِنِّي قَدْ أَعْطَيْتُكَ لِأُمَّتِكَ أَنْ لَا أُهْلِكَهُمْ بِسَنَةٍ بِعَامَّةٍ، وَلَا أُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِمَّنْ سِوَاهُمْ فَيُهْلِكُوهُمْ بِعَامَّةٍ، حَتَّى يَكُونَ بَعْضُهُمْ يُهْلِكُ بَعْضًا، وَبَعْضُهُمْ يَقْتُلُ بَعْضًا، وَبَعْضُهُمْ يَسْبِي بَعْضًا»

قَالَ: وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَإِنِّي لَا أَخَافُ عَلَى أُمَّتِي إِلَّا الْأَئِمَّةَ الْمُضِلِّينَ، فَإِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي لَمْ يُرْفَعْ عَنْهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


Musnad-Ahmad-21297

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

21297. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் கையை பிடித்து கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “எனது சமுதாயத்தின் விசயத்தில் தஜ்ஜாலை விட தஜ்ஜால் அல்லாதவர்கள் என்னை அதிகம் பயம்கொள்ளச் செய்கின்றனர் என்று கூறியதை செவியேற்றேன்.

நான் வீட்டை அடைந்தபின் உள்ளே செல்ல பயந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! உங்கள் சமுதாயத்தின் விசயத்தில் தஜ்ஜாலை விட உங்களை அதிகம் பயம்கொள்ளச் செய்தது எது? என்றுக் கேட்டேன். அதற்கவர்கள், “வழிகெடுக்கும் தலைவர்கள் தான்” என்று பதிலளித்தார்கள்.


كُنْتُ مُخَاصِرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا إِلَى مَنْزِلِهِ، فَسَمِعْتُهُ يَقُولُ: «غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُ عَلَى أُمَّتِي مِنَ الدَّجَّالِ» فَلَمَّا خَشِيتُ أَنْ يَدْخُلَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ شَيْءٍ أَخْوَفُ عَلَى أُمَّتِكَ مِنَ الدَّجَّالِ؟ قَالَ: «الْأَئِمَّةَ الْمُضِلِّينَ»


Musnad-Ahmad-21296

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

21296. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “எனது சமுதாயத்தின் விசயத்தில் தஜ்ஜால் அல்லாதவர்களும் என்னை அதிகம் பயம்கொள்ளச் செய்கின்றனர் என மூன்று தடவைக் கூறினார்கள்.

அதற்கு நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! உங்கள் சமுதாயத்தின் விசயத்தில் உங்களை அதிகம் பயம்கொள்ளச் செய்த தஜ்ஜால் அல்லாதவர்கள் யார்? என்றுக் கேட்டேன். அதற்கவர்கள், “வழிகெடுக்கும் தலைவர்கள் தான்” என்று பதிலளித்தார்கள்.


كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَغَيْرُ الدَّجَّالِ أَخْوَفُنِي عَلَى أُمَّتِي» قَالَهَا ثَلَاثًا. قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا الَّذِي غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُكَ عَلَى أُمَّتِكَ؟ قَالَ: «أَئِمَّةً مُضِلِّينَ»


Almujam-Alkabir-55

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

55. ஐந்து செயல்களில் ஒன்றை செய்பவரும் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவைகள்:

1 . நோயாளியை நலம் விசாரிப்பவர்.

2 . ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்பவர்.

3 . அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போருக்கு செல்பவர்.

4 . (முஸ்லிம்) தலைவரைக் கண்ணியப்படுத்தவும், பலப்படுத்தவும் அவரின் ஆதிக்கத்தில் தன்னை ஈடுபடுத்தியவர்.

5 . தனது வீட்டில் அமர்ந்து, அதனால் அவரது பிரச்சனையிலிருந்து மக்களும், மக்களின் பிரச்சனையிலிருந்து அவரும் பாதுகாப்பு பெற்றுக் கொண்டவர்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


خَمْسٌ مَنْ فَعَلَ وَاحِدَةً مِنْهُنَّ كَانَ ضَامِنًا عَلَى اللهِ: مَنْ عَادَ مَرِيضًا، أَوْ خَرَجَ مَعَ جَنَازَةٍ، أَوْ خَرَجَ غَازِيًا، أَوْ دَخَلَ عَلَى إِمَامِهِ يُرِيدُ تَعْزِيرَهُ وَتَوْقِيرَهُ، أَوْ قَعَدَ فِي بَيْتِهِ فَسَلِمَ النَّاسُ مِنْهُ وَسَلِمَ مِنَ النَّاسِ


Musnad-Ahmad-22093

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22093. ஐந்து செயல்களை செய்பவர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு வாக்குறுதி அளித்தார்கள்.

1 . நோயாளியை நலம் விசாரிப்பவர்.

2 . ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்பவர்.

3 . அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போருக்கு செல்பவர்.

4 . (முஸ்லிம்) தலைவரைக் கண்ணியப்படுத்தவும், பலப்படுத்தவும் அவரின் ஆதிக்கத்தில் தன்னை ஈடுபடுத்தியவர்.

5 . தனது வீட்டில் அமர்ந்து, அதனால் அவரது பிரச்சனையிலிருந்து மக்களும், மக்களின் பிரச்சனையிலிருந்து அவரும் பாதுகாப்பு பெற்றுக் கொண்டவர்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَمْسٍ مَنْ فَعَلَ مِنْهُنَّ كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ: «مَنْ عَادَ مَرِيضًا، أَوْ خَرَجَ مَعَ جَنَازَةٍ، أَوْ خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ، أَوْ دَخَلَ عَلَى إِمَامٍ يُرِيدُ بِذَلِكَ تَعْزِيرَهُ وَتَوْقِيرَهُ، أَوْ قَعَدَ فِي بَيْتِهِ فَيَسْلَمُ النَّاسُ مِنْهُ وَيَسْلَمُ»


Next Page » « Previous Page