Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-293

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

293. ஒருபெண்மணிக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அவர் அப்துற்றஹ்மான் பின் அவ்ப் (ரலி)யின் மனைவியாவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஒவ்வொரு தொழுகையின் போதும் குளித்து தொழ வேண்டும் என ஏவினார்கள் என்று ஜைனப் பின்த் அபூஸலமா அறிவிக்கின்றார்கள்.

துப்புரவான பிறகு சந்தேகம் ஏற்படும் வகையில் எதையேனும் காண்கின்ற பெண் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது ஒரு நரம்பு (காரணமாகத்)தான் என்றோ அல்லது நரம்புகள் என்றோ கூறினார்கள். இவ்வாறு ஆயிஷா (ரலி) அறிவித்ததாக ஜைனப் பின்த் அபூஸலமா அறிவிக்கின்றார்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

(இந்த ஹதீஸில் குளிக்க வேண்டும் என்ற காரியம் மட்டும இடம் பெறுகின்றது) ஆனால் (அந்த ஹதீஸில்) பின்னால் இடம் பெறும் தன்னுடைய ஹதீஸில் (295 வது ஹதீஸ்) காஸிம் அறிவித்திருப்பது போன்று இப்னு அகீல் அறிவிக்கும் (287 வது ஹதீஸில்) இரண்டு காரியங்களும் சேர்ந்தே இடம் பெற்றிருக்கின்றன. (அந்த ஹதீஸில்) ஒவ்வொரு தொழுகைக்கும் நீ குளித்துக் கொள் அல்லது இரண்டு தொழுகைகளை சேர்த்து (தொழுது) கொள்க என்று

أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدَّمَ، وَكَانَتْ تَحْت عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَهَا أَنْ تَغْتَسِلَ عِنْدَ كُلِّ صَلَاةٍ وَتُصَلِّي» وأَخْبَرَنِي أَنَّ أُمَّ بَكْرٍ أَخْبَرَتْهُ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: ” إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فِي الْمَرْأَةِ تَرَى مَا يُرِيبُهَا بَعْدَ الطُّهْرِ «إِنَّمَا هِيَ عِرْقٌ» أَوْ قَالَ: «عُرُوقٌ»


Abu-Dawood-292

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

292. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் உம்முஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி)க்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அவரை நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்கும்படி கட்டளையிட்டார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் என அறிவித்து இதன் அறிவிப்பாளர் தொடர்ந்து இந்த ஹதீஸை அறிவிக்கின்றார்.

ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)க்கு உதிரப்போக்கு ஏற்பட்டு விட்டது. அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் நீ குளித்துக்கொள் என்று சொன்னார்கள் என ஆயிஷா (ரலி) அறிவித்து இதன் அறிவிப்பாளர் இந்த ஹதீஸை தொடர்ந்து அறிவிக்கின்றார்.

ஆயிஷா (ரலி) – உர்வா – ஜுஹ்ரி – சுலைமான் வழியாக இந்த ஹதீஸை அபூவலீத் அத்தாலிஸி அறிவிக்கின்றார். ஆனால் நான் இந்த ஹதீஸை அவரிடமிருந்து செவியுறவில்லை என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள். 

சுலைமான் பின் கஸீர் மூலம் இந்த ஹதீஸை அப்துஸ்ஸமத் அறிவிக்கும் போது நீ ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்து கொள் என்று (கூறியதாக) அறிவிக்கின்றார். ஆனால் இது அப்துஸ்ஸமதின் கற்பனைதான். அபூவலீதின் அறிவிப்புதான்

أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ اسْتُحِيضَتْ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَأَمَرَهَا بِالْغُسْلِ لِكُلِّ صَلَاةٍ»، وَسَاقَ الْحَدِيثَ


Abu-Dawood-291

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

291.


أَنَّ أُمَّ حَبِيبَةَ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ «فَأَمَرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَغْتَسِلَ» فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ


Abu-Dawood-290

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

290. இந்த ஹதீஸை உர்வா – இப்னு ஹிஷாம் – லைஸ் பின் சஃத் வழியாக யசீத் பின் காலித் பின் அப்துல்லாஹ் பின் மவ்ஹிம் அல்ஹமதானி அறிவிக்கும் போது ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பார் என ஆயிஷா (ரலி) அறிவித்ததாக தெரிவிக்கின்றார்.

உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) – ஆயிஷா (ரலி) – (உர்வாவுக்கு பதிலாக) அம்ரா – இப்னு ஹிஷாம் – யூனுஸ் வழியாக காஸிம் பின் மப்ரூர் இதை அறிவிக்கின்றார்.

(உர்வாவுக்கு பதிலாக அம்ரா என்று) காஸிம் அறிவிப்பது போலவே ஆயிஷா (ரலி) – அம்ரா – ஜுஹ்ரி வழியாக மஃமர் அறிவிக்கின்றார். (ஆயிஷா (ரலி) என்று குறிப்பிடாமல்) மேலுள்ள ஹதீஸ் கருத்துப்படி உம்முஹபீபா – அம்ரா வழியாக என்று ம்மஃமர் அறிவித்திருக்கின்றார்.

இது மாதிரியே (உர்வா என்பதற்கு பதிலாக ஆயிஷா (ரலி) – அம்ரா – ஜுஹ்ரி வழியாக இதை இப்ராஹீம் பின் சஃத், இப்னு உஐனா ஆகியோர் அறிவிக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் அவû (ஒவ்வொரு தொழுகையின் போதும்) குளிக்கும் படி கட்டளையிட்டார்கள் என்று ஜுஹ்ரி அறிவிக்கவில்லை என இப்னு உஐனா தனது ஹதீஸில் குறிப்பிடுகின்றார்.

فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ. قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ الْقَاسِمُ بْنُ مَبْرُورٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَاب، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ أُمِّ حَبِيبَةَ بِنْتِ جَحْشٍ وَكَذَلِكَ رَوَاهُ مَعْمر، عَنِ الزُّهْرِيِّ، عَن عَمْرَةَ، عَنْ عَائِشَةَ وَرُبَّمَا قَال مَعْمَرٌ: عَنْ عَمْرَةَ، عَنْ أُمِّ حَبِيبَةَ بِمَعْنَاهُ، وَكَذَلِكَ رَوَاهُ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، وَابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، وَقَال ابْنُ عُيَيْنَةَ فِي حَدِيثِهِ، وَلَمْ يَقُلْ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهَا أَنْ تَغْتَسِلَ، وَكَذَلِكَ رَوَاهُ الْأَوْزَاعِيُّ أَيْضًا قَالَ فِيهِ: قَالَتْ عَائِشَةُ: «فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ»


Abu-Dawood-289

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

289. உம்மு ஹபீபா (ரலி) – அம்ரா பின்த் அப்துர் றஹ்மான் இப்னு ஹிஷாம் – யூனுஸ் – அன்பஸா வழியாக அஹ்மத் பின் சாலிஹ் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது ஒவ்வொரு தொழுகைக்கும் அவர் குளிப்பார் என்று ஆயிஷா (ரலி) கூறியதாக அறிவிக்கின்றார்.


«فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ»


Abu-Dawood-288

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 111

தொடர் உதிரப்போக்குள்ளவர் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்தல்.

288. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும் அப்துர்றஹ்மான் பின் அவ்ப் (ரலி) மனைவியுமான ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி)க்கு ஏழாண்டுகள் உதிரப்போக்கு ஏற்பட்டது. அவர் அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்களிடம் இது சம்பந்தமாக தீர்ப்பு கோரிய போது இது நிச்சயமாக மாதவிடாய் அல்ல! எனினும் இது ஒரு நரம்பு (காரணமாகத்) தான் (ஏற்படுகின்றது) எனவே குளித்து தொழுது கொள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்

உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் தனது சகோதரியான ஜைனப் பின்த் ஜஹ்ஷின் அறையில் உள்ள பாத்திரத்தில் குளித்து கொண்டிருப்பார். இரத்தச் சிவப்பு தண்ணீர் மிகைத்து விடும் என்று ஆயிஷா (ரலி) குளிப்பிடுகின்றார்.


أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ خَتَنَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ، فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذِهِ لَيْسَتْ بِالْحَيْضَةِ، وَلَكِنْ هَذَا عِرْقٌ فَاغْتَسِلِي وَصَلِّي». قَالَتْ عَائِشَةُ فَكَانَتْ تَغْتَسِلُ فِي مِرْكَنٍ فِي حُجْرَةِ أُخْتِهَا زَيْنَبَ بِنْتِ جَحْشٍ حَتَّى تَعْلُوَ حُمْرَةُ الدَّمِ الْمَاءَ


Abu-Dawood-287

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

287. எனக்கு மிக மிக அதிகமாக உதிரப்போக்கு ஏற்படுகின்ற காரணத்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்கோரி தெரிவிக்க வந்தேன். அவர்களை என்னுடைய சகோதரி ஜைனப் பின்த் ஜஹ்ஷ் வீட்டில் (இருக்க) கண்டேன். அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அதிகமான உதிரப்போக்குள்ள ஒரு பெண். அது என்னை தொழுவதை விட்டும் நோன்பு நோற்பதை விட்டும் தடுத்து விட்டது. அது தொடர்பாக நீங்கள் என்ன (தீர்ப்பு வழங்க) நினைக்கிறீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பஞ்சு ஒன்று (வைத்துக் கொள்ளும்படி) தெரிவிக்கின்றேன். நிச்சயமாக அது இரத்தத்தை உறிஞ்சி (போக்கி) விடும் என்று சொன்னார்கள். அதற்கு நான் இரத்தம் பஞ்சையும் மிஞ்சியதாகும் என்றேன். அதற்கு அவர்கள் ஒரு துணியை வைத்துக் கொள் என்று சொன்னார்கள். நான் அதையும் மிகைக்கக் கூடியது என்றேன். எனக்கு இரத்தம் கொட்டிக் கொண்டிருக்கின்றது என்றேன். நான் உனக்கு இரண்டு காரியங்களை கட்டளையிடுகின்றேன். அவ்விருகாரியங்களில் நீ எதைச் செய்தாலும் ஒன்று இன்னொன்றுக்கு பரிகாரமாக அமைந்துவிடும். அவ்விரண்டில் நீ (எதை) பயன்படுத்த முடியும் என்பதை நீதான் நன்கு அறிந்தவள் என்று சொன்னார்கள். (மேலும்) இது ஷைத்தானின் தாக்குதல்களில் இது ஒரு (வகையான) தாக்குதலாகும்.

كُنْتُ أُسْتَحَاضُ حَيْضَةً كَثِيرَةً شَدِيدَةً، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْتَفْتِيهِ وَأُخْبِرُهُ، فَوَجَدْتُهُ فِي بَيْتِ أُخْتِي زَيْنَبَ بِنْتِ جَحْشٍ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ حَيْضَةً كَثِيرَةً شَدِيدَةً، فَمَا تَرَى فِيهَا قَدْ مَنَعَتْنِي الصَّلَاةَ وَالصَّوْمَ. فَقَالَ: «أَنْعَتُ لَكِ الْكُرْسُفَ، فَإِنَّهُ يُذْهِبُ الدَّمَ». قَالَتْ: هُوَ أَكْثَرُ مِنْ ذَلِكَ. قَالَ: «فَاتَّخِذِي ثَوْبًا». فَقَالَتْ: هُوَ أَكْثَرُ مِنْ ذَلِكَ إِنَّمَا أَثُجُّ ثَجًّا. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَآمُرُكِ بِأَمْرَيْنِ أَيَّهُمَا فَعَلْتِ أَجْزَأَ عَنْكِ مِنَ الْآخَرِ، وَإِنْ قَوِيتِ عَلَيْهِمَا فَأَنْتِ أَعْلَمُ». قَالَ لَهَا: «إِنَّمَا هَذِهِ رَكْضَةٌ مِنْ رَكَضَاتِ الشَّيْطَانِ فَتَحَيَّضِي سِتَّةَ أَيَّامٍ أَوْ سَبْعَةَ أَيَّامٍ فِي عِلْمِ اللَّهِ، ثُمَّ اغْتَسِلِي حَتَّى إِذَا رَأَيْتِ أَنَّكِ قَدْ طَهُرْتِ، وَاسْتَنْقَأْتِ فَصَلِّي ثَلَاثًا وَعِشْرِينَ لَيْلَةً أَوْ أَرْبَعًا وَعِشْرِينَ لَيْلَةً وَأَيَّامَهَا وَصُومِي، فَإِنَّ ذَلِكَ يَجْزِيكِ، وَكَذَلِكَ فَافْعَلِي فِي كُلِّ شَهْرٍ كَمَا تَحِيضُ النِّسَاءُ، وَكَمَا يَطْهُرْنَ مِيقَاتُ حَيْضِهِنَّ وَطُهْرِهِنَّ، وَإِنْ قَوِيتِ عَلَى أَنْ تُؤَخِّرِي الظُّهْرَ وَتُعَجِّلِي الْعَصْرَ فَتَغْتَسِلِينَ وَتَجْمَعِينَ بَيْنَ الصَّلَاتَيْنِ الظُّهْرِ وَالْعَصْرِ، وَتُؤَخِّرِينَ الْمَغْرِبَ  وَتُعَجِّلِينَ الْعِشَاءَ، ثُمَّ تَغْتَسِلِينَ وَتَجْمَعِينَ بَيْنَ الصَّلَاتَيْنِ فَافْعَلِي، وَتَغْتَسِلِينَ مَعَ الْفَجْرِ فَافْعَلِي، وَصُومِي إِنْ قَدِرْتِ عَلَى ذَلِكَ». قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَهَذَا أَعْجَبُ الْأَمْرَيْنِ إِلَيَّ»


Abu-Dawood-286

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

286. பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி)க்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அவரிடம் நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் இரத்தம் அறியப்பட்ட கருத்த இரத்தமாகும். இந்த இஸ்ரத்தம் வந்திருந்தால் நீ தொழுகையை விட்டு விடு. வேறு இரத்தமாக இருந்தால் நீ உலூச் செய்து தொழு. நிச்சயமாக அது ஒரு நரம்பு (காரணமாக)த்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உர்வா பின் ஜுபைர் அறிவிக்கின்றார்.

இப்னு அபூ அதீ தனது ஏட்டிலிருந்து மேற்கண்ட மாதிரி அறிவித்தார். பிறகு அவர் மனனமாக அறிவிக்கும் போது பாதிமாவுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது என்று மேலுள்ள ஹதீஸின் கருத்தை ஆயிஷா (ரலி) அறிவித்ததாக உர்வா மூலம் ஜுஹ்ரி வழியாக முஹம்மது பின் முஸன்னா அறிவித்தார் என்று குறிப்பிட்டார். இவ்வாறு முஹம்மது பின் முஸன்னா தெரிவிக்கின்றார்.

இரத்தம் பெருக்கெடுத்து ஓடுவதை ஒரு பெண் கண்டால் அவர் தொழ வேண்டாம். ஒரு மணிநேர நேரஅளவுக்கு துப்புரவை கண்டால்கூட அவர் குளித்துத் தொழுவாராக என உதிரப்போக்குள்ள பெண் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அனஸ் பின் சிரீன் அறிவிக்கின்றார்.

பெண்களுக்கு

أَنَّهَا كَانَتْ تُسْتَحَاضُ، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ دَمُ الْحَيْضَةِ فَإِنَّهُ أَسْوَدُ يُعْرَفُ، فَإِذَا كَانَ ذَلِكَ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ، فَإِذَا كَانَ الْآخَرُ فَتَوَضَّئِي وَصَلِّي فَإِنَّمَا هُوَ عِرْقٌ»


Abu-Dawood-285

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

285. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும்; அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் மனைவியுமான உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் (இஸ்திஹாளா எனும்) அதிக இரத்தப்போக்கு நோய் ஏற்பட்டிருந்தது. எனவே அவர், இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், “இது மாதவிடாய் இரத்தமல்ல. இது நரம்பிலிருந்து வெளிப்படும் இரத்தமாகும். ஆகவே, குளித்துவிட்டுத் தொழுதுகொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(இந்த நபிமொழி இருபத்து நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த அறிவிப்பை இவர்களிடமிருந்து அறிவிக்கும் உர்வா, அம்ரா ஆகியோரிடமிருந்து ஜுஹ்ரீ வழியாக அவ்ஸாயீ அறிவிக்கும் போது, “அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் மனைவி உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் ஏழு ஆண்டுகள் அதிக இரத்தப் போக்கு நோய்க்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். எனவே நபி (ஸல்) அவர்கள் (வழக்கமான) மாதவிடாய் நாள்கள் வந்துவிட்டால் தொழுகையைத் தவிர்த்துவிடு. (வழக்கமான) மாதவிடாய் நாள்கள் முடிந்துவிட்டால் (இரத்தம் வந்து கொண்டிருந்தாலும்) குளித்துவிட்டுத் தொழுதுகொள்” என்று நபி (ஸல்)

أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ خَتَنَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ، فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذِهِ لَيْسَتْ بِالْحَيْضَةِ وَلَكِنْ هَذَا عِرْقٌ، فَاغْتَسِلِي وَصَلِّي»


Abu-Dawood-284

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 109

அதிக இரத்தப்போக்குள்ளவள் வழக்கமான மாதவிடாய் ஆரம்ப மாகிவிட்டால் தொழமாட்டாள்.

284. புஹய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (வந்து), “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் அமைப்பு கெட்டுவிட்டது. தொடர்ந்து இரத்தம் வந்துகொண்டே இருக்கிறது” என்பதைக் குறித்துக் கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், (இதை நபியவர்களிடம் கேட்டார் கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முன்பு – அவளின் மாத விடாய் சீராக இருந்தபோது ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும் நாள்களைக் கணக்கிட்டு அவற்றையே வழக்கமான மாதவிடாய் நாள்களாய்க் கருத வேண்டும்.
அந்த நாள்களில் தொழுகை யைத் தவிர்த்து விடவேண்டும். பின்னர் குளித்துவிட்டு அதிகப் படியான துணியால் உள்ளாடை

…..

பாடம் : 110

மாதவிடாய் வந்ததும் தொழுகையை விட வேண்டும் என்று வரும் அறிவிப்பு.

284. மாதவிடாய் (இரத்தம்) கெட்டு போய், இரத்தப்போக்கு ஏற்பட்டு விட்ட ஒரு பெண் தொடர்பாக ஆயிஷா (ரலி)யிடம் ஒரு பெண் வினவினார். (இதுபற்றி ஆயிஷா (ரலி) அறிவித்ததாவது) 

மாதவிடாய் சரியாக வந்துக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு மாதமும் அந்த பெண்தான் மாதவிடாய் ஆகும் காலஅளவுக்கு (தொழாமல்)

سَمِعْتُ امْرَأَةً تَسْأَلُ عَائِشَةَ عَنِ امْرَأَةٍ فَسَدَ حَيْضُهَا وَأُهْرِيقَتْ دَمًا، فَأَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ آمُرَهَا «فَلْتَنْظُرْ قَدْرَ مَا كَانَتْ تَحِيضُ فِي كُلِّ شَهْرٍ وَحَيْضُهَا مُسْتَقِيمٌ، فَلْتَعْتَدَّ بِقَدْرِ ذَلِكَ مِنَ الْأَيَّامِ، ثُمَّ لِتَدَعِ الصَّلَاةَ فِيهِنَّ أَوْ بِقَدْرِهِنَّ، ثُمَّ لِتَغْتَسِلْ، ثُمَّ لِتَسْتَثْفِرْ بِثَوْبٍ، ثُمَّ لِتُصَلِّ»


Next Page » « Previous Page