ஹதீஸின் தரம்: விபரம் கீழே
281. ஃபாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அஸ்மா (ரலி) அவர்களிடம் “எனக்கு இரத்தப்போக்கு அதிகமாக உள்ளது, என்ன செய் வது என்பதைக் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டுச்சொல்” என்று கோரினேன். (அவ்வாறே அஸ்மா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் கேட்டார்கள்)
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மாதவிடாயில் வழக்கமாக எத்தனை நாள்கள் அமர்வாயோ அதே அளவு நாள்கள் உட்கார்ந்துவிடு. பிறகு குளித்து(விட்டுத் தொழுது)விடு” என்று பதிலளித்தார்கள்.
இந்த நபிமொழி எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன்:
“உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், பி அவரிடம் “(வழக்கமான) மாதவிடாய் நாள்களில் தொழுகையைத் தவிர்த்து விட்டு (வழக்கமான நாள்கள் முடிந்ததும்) குளித்துவிட்டுத் தொழுது கொள்” என்று கட்டளையிட்டார்கள் என உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூதாவூத்
أَنَّهَا أَمَرَتْ أَسْمَاءَ أَوْ أَسْمَاءُ حَدَّثَتْنِي أَنَّهَا أَمَرَتْهَا فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ، أَنْ تَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَأَمَرَهَا أَنْ تَقْعُدَ الْأَيَّامَ الَّتِي كَانَتْ تَقْعُدُ، ثُمَّ تَغْتَسِلُ»
சமீப விமர்சனங்கள்