Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-198

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 79

இரத்தம் வெளிப்படுவதால் உளூ நீங்குமா ?

198. தாது ரிகாஃ என்ற போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றோம். (எங்கள் தோழர்களில்) ஒருவர் இணை வைப்பாளர்களின் ஒருவனின் மனைவியை கொன்று விட்டார். அவளது கணவன் முஹம்மதுடைய தோழர்களில் எவரையேனும் கொல்லாமல் ஓயப்போவ தில்லை என்று சத்தியம் செய்து கொண் டான். எனவே அவன் நபி (ஸல்) அவர் களின் அடிச்சுவற்றை தொடரலானான். நபி (ஸல்) அவர்கள் ஓரிடத்தில் தங்கினார் கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் நம்மை காவல் புரிபவர்கள் யார் என வினவினார் கள். முஹாஜிர்களில் ஒருவரும் அன்சாரி களில் ஒருவரும் பதிலளித்ததும். நீங்கள் இருவரும் கணவாயின் வாயிலில் (காவல்) இருந்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்விருவரும் கணவாயின் வாயிலுக்குச் சென்றதும். முஹாஜிர் தோழர் படுத்துக்கொண்டார். அன்சாரித் தோழர் தொழத் துவங்கினார். (சபதம் செய்த)அந்த மனிதன் வந்து விட்டான். அவன் (தொழுகின்ற) அவரது தோற்றத்தைக் கண்டதும் அக்கூட்டத்தின் காவலாளி என்று வினங்கிக் கொண்டான். அவரை நோக்கி அவன் அம்பு எய்தான். அதை அவர்மேல் (குறி தவறாது)விழச் செய் தான். அதை அவர் கழற்றி விட்டார். இவ் வாறு அவன் மூன்று அம்புகளை அவரை நோக்கி எறியும்வரை (அவர்

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَعْنِي فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ – فَأَصَابَ رَجُلٌ امْرَأَةَ رَجُلٍ مِنَ الْمُشْرِكِينَ، فَحَلَفَ أَنْ لَا أَنْتَهِيَ حَتَّى أُهَرِيقَ دَمًا فِي أَصْحَابِ  مُحَمَّدٍ، فَخَرَجَ يَتْبَعُ أَثَرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْزِلًا، فَقَالَ: مَنْ رَجُلٌ يَكْلَؤُنَا؟ فَانْتَدَبَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ وَرَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَالَ: «كُونَا بِفَمِ الشِّعْبِ»، قَالَ: فَلَمَّا خَرَجَ الرَّجُلَانِ إِلَى فَمِ الشِّعْبِ اضْطَجَعَ الْمُهَاجِرِيُّ، وَقَامَ الْأَنْصَارِيُّ يُصَلِّ، وَأَتَى الرَّجُلُ فَلَمَّا رَأَى شَخْصَهُ عَرَفَ أَنَّهُ رَبِيئَةٌ لِلْقَوْمِ، فَرَمَاهُ بِسَهْمٍ فَوَضَعَهُ فِيهِ فَنَزَعَهُ، حَتَّى رَمَاهُ بِثَلَاثَةِ أَسْهُمٍ، ثُمَّ رَكَعَ وَسَجَدَ، ثُمَّ انْتَبَهَ صَاحِبُهُ، فَلَمَّا عَرَفَ أَنَّهُمْ قَدْ نَذِرُوا بِهِ هَرَبَ، وَلَمَّا رَأَى الْمُهَاجِرِيُّ مَا بِالْأَنْصَارِيِّ مِنَ الدَّمِ، قَالَ: سُبْحَانَ اللَّهِ أَلَا أَنْبَهْتَنِي أَوَّلَ مَا رَمَى، قَالَ: كُنْتَ فِي سُورَةٍ أَقْرَؤُهَا فَلَمْ أُحِبَّ أَنْ أَقْطَعَهَا


Abu-Dawood-197

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 78

பால் பருகியதும் உளூச் செய்யாமலிருக்க அனுமதி.

197. அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் பால் பருகினார்கள். ஆனால், வாய்க் கொப்பளிக்காமலும், உலூச்செய்யாமலும் தொழுதார்கள் . 

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜைத் அல்ஹப்பாப் என்பார் தனக்கு அறிவித்த அறிவிப்பாளர் முதீ பின் ராஷித் என்பாரைப் பற்றி, எனக்கு இந்த அறிவிப்பாளரை அறிமுகப்படுத்தியவர் ஷுஃபா ஆவார் என்று கூறுகிறார்.


«إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا، فَلَمْ يُمَضْمِضْ وَلَمْ يَتَوَضَّأْ وَصَلَّى»، قَالَ زَيْدٌ: دَلَّنِي شُعْبَةُ عَلَى هَذَا الشَّيْخِ


Abu-Dawood-196

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 77

பால் பருகியதும் உளூச் செய்தல்.

196. நபி (ஸல்) அவர்கள் பால் பருகினார் கள். பிறகு தண்ணீர் கொண்டுவரச் செய்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு, இது கொழுப்பு அடங்கியது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا فَدَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ، ثُمَّ قَالَ: «إِنَّ لَهُ دَسَمًا»


Abu-Dawood-195

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

195. அபூசுப்யான் பின் சயீத் பின் அல்முகீரா என்பார் உம்மு ஹபீபா (ரலி)யிடம் சென்றார். அவரை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (மாவு கலந்த) பானத்தை அருந்தச் செய்தனர். அவர் பருகிவிட்டு தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வாய்க் கொப்பளித்தார். அப்போது, எனது சகோதரியின் மகனே! நீ உலூச் செய்ய வேண்டாமா? நபி (ஸல்) அவர்கள் நெருப்பில் சமைத்த பொருளை உண்பதினால் உலூச் செய்யுங்கள் என்று சொன்னார்கள் என்று உம்மு ஹபீபா (ரலி) கூறினார்கள். 

அறிவிப்பவர் : அபூஸலமா (ரலி).


أَنَّهُ دَخَلَ عَلَى أُمِّ حَبِيبَةَ فَسَقَتْهُ قَدَحًا مِنْ سَوِيقٍ، فَدَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ، فَقَالَتْ: يَا ابْنَ أُخْتِي أَلَا تَوَضَّأُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَوَضَّئُوا مِمَّا غَيَّرَتِ النَّارُ» أَوْ قَالَ: «مِمَّا مَسَّتِ النَّارُ»


Abu-Dawood-194

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 76

சமைத்ததை சாப்பிட்டால் உளூ செய்ய வேண்டும் என்று வலியுறுத்துதல்.

194. நெருப்பில் சமைத்ததை சாப்பிடுவதால் உலூச் செய்வது அவசியமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).


«الْوُضُوءُ مِمَّا أَنْضَجَتِ النَّارُ»


Abu-Dawood-193

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

193. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்ஹர்ஸ் பின் ஜஸ்உ (ரலி) அவர்கள் எகிப்து நாட்டில் எங்களிடம் வருகை அளித்தனர். எகிப்திய பள்ளிவாசலில் அவர்கள் ஹதீஸ் அறிவிக்கும் போது நான் செவியுற்றேன். அவர் கூறியதாவது, ஒருவரது வீட்டில் அல் லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் நாங் கள் ஆறு, ஏழு பேர்கள் இருந்தோம் என எண்ணுகிறேன். அப்போது பிலால் (ரலி) வந்து அவர்களை தொழுகைக்கு அழைத் தார்கள். உடனே நாங்கள் புறப்பட்டு சட்டியை நெருப்பில்(அடுப்பில்) வைத் திருந்த ஒருவருக்கு அருகில் சென்றோம். அவரிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள் உனது சமையல் ஆகி விட்டதா? என்று வினவினார்கள். அவர் ஆம். எங்களின் தந்தையும் தாயும் தங்க ளுக்கு அர்ப்பணம் ஆகட்டும் என்று பதில ளித்தார். அதி லிருந்து அவர்கள் ஒரு துண்டை எடுத்து அதை தொழுகைக்கு அவர்கள் தக்பீர் கட்டும் வரை மென்று கொண்டிருந் தார்கள். நான் அவர்களையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். 

அறிவிப்பவர் : உபைத் பின் சுமாமா அல்முராதீ.


قَدِمَ عَلَيْنَا مِصْرَ عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ بْنِ جَزْءٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَمِعْتُهُ يُحَدِّثُ فِي مَسْجِدِ مِصْرَ، قَالَ: لَقَدْ رَأَيْتُنِي سَابِعَ سَبْعَةٍ أَوْ سَادِسَ سِتَّةٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَارِ رَجُلٍ، فَمَرَّ بِلَالٌ فَنَادَاهُ بِالصَّلَاةِ، فَخَرَجْنَا فَمَرَرْنَا بِرَجُلٍ وَبُرْمَتُهُ عَلَى النَّارِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطَابَتْ بُرْمَتُكَ»، قَالَ: نَعَمْ، بِأَبِي أَنْتَ وَأُمِّي فَتَنَاوَلَ مِنْهَا بَضْعَةً، فَلَمْ يَزَلْ يَعْلُكُهَا حَتَّى أَحْرَمَ بِالصَّلَاةِ، وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ


Abu-Dawood-192

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு செயல் முறைகளில் இறுதியானது, சமைக்கப் பட்ட பொருட்களை சாப்பிடுவதால் உலூச் செய்யாமல் இருப்பது தான். 

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

இது முந்தைய ஹதீஸின் சுருக்கமே என்று அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.


«كَانَ آخِرَ الْأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْكُ الْوُضُوءِ مِمَّا غَيَّرَتِ النَّارُ»


Abu-Dawood-191

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

191. நபி (ஸல்) அவர்களுக்கு நான் இறைச்சியும் ரொட்டியும் அளித்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்ய தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதில் உலூச் செய்தார்கள். பிறகு லுஹர் தொழுதார்கள். பிறகு மீதமுள்ள உணவை கொண்டு வரும் படி கூறி சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழலானார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).


«قَرَّبْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُبْزًا وَلَحْمًا فَأَكَلَ، ثُمَّ دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ بِهِ، ثُمَّ صَلَّى الظُّهْرَ، ثُمَّ دَعَا بِفَضْلِ طَعَامِهِ فَأَكَلَ، ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ»


Abu-Dawood-190

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

190. நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப்பகுதியை கடைவாய் பற்களால் கடித்துச் சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْتَهَشَ مِنْ كَتِفٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


Abu-Dawood-189

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

189. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப்பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு தனக்கு கீழிருந்த விரிப்பு துணியில் தனது கையை துடைத்தார்கள். பிறகு நின்று தொழலானார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتِفًا، ثُمَّ مَسَحَ يَدَهُ بِمِسْحٍ كَانَ تَحْتَهُ، ثُمَّ قَامَ فَصَلَّى»


Next Page » « Previous Page