Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-856

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

856. (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்து, (அவசர அவசரமாகத்) தொழ ஆரம்பித்தார். (அவர் தொழுது முடித்த பின்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸலாம் கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பதில் ஸலாம் கூறிவிட்டு, “திரும்பவும் சென்று நீர் தொழுவீராக; நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள்.

அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு தொழுததைப் போன்றே தொழுதுவிட்டு மறுபடியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ஸலாம் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்மீது சாந்தி உண்டாகட்டும்!” என்று சொல்லிவிட்டு, “திரும்பவும் நீர் தொழுவீராக; நீர் தொழவே இல்லை” என்று மீண்டும் சொன்னார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள்.

அதற்கு அம்மனிதர், “சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த முறையில் தொழுவதைத் தவிர வேறு எதையும் நான்
அறிந்திருக்கவில்லை. எனவே, (தொழும் முறையை) எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் தொழுகைக்கு நின்றால் தக்பீர் கூறியபின் குர்ஆனில் உமக்குத் தெரிந்த (இலகுவான)தை ஓதுவீராக. பின்னர் அமைதியாக ருகூஉ செய்வீராக. பின்னர் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி – நேராக, நிம்மதியாக

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ، فَدَخَلَ رَجُلٌ، فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ السَّلَامَ، وَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَرَجَعَ الرَّجُلُ، فَصَلَّى كَمَا كَانَ صَلَّى، ثُمَّ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَلَّمَ عَلَيْهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَعَلَيْكَ السَّلَامُ»، ثُمَّ قَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مِرَارٍ، فَقَالَ الرَّجُلُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، مَا أُحْسِنُ غَيْرَ هَذَا فَعَلِّمْنِي، قَالَ: «إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ اجْلِسْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا»،

قَالَ الْقَعْنَبِيُّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَقَالَ فِي آخِرِهِ: «فَإِذَا فَعَلْتَ هَذَا فَقَدْ تَمَّتْ صَلَاتُكَ، وَمَا انْتَقَصْتَ مِنْ هَذَا شَيْئًا، فَإِنَّمَا انْتَقَصْتَهُ مِنْ صَلَاتِكَ»، وَقَالَ فِيهِ: إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَأَسْبِغِ الْوُضُوءَ


Abu-Dawood-861

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

861. ஏழு அறிவிப்புகளில் ஏழாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,

“மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி நீ அங்கத் தூய்மை செய்துகொள். அது (அங்கத் தூய்மை) முடிந்த பின் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று பாங்கு சொல். பின்பு இகாமத் சொல்லி தொழுகைக்கு நின்ற பின் தக்பீர் கூறி, குர்ஆனிலிருந்து எதுவும் (மனனமாக) இருந்தால் அதனை ஓது.

குர்ஆனில் எதுவும் மனனம் இல்லையென்றால் “அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்.

இவற்றிலிருந்து எதுவும் நீ குறைவு செய்தால் உனது தொழுகையில் நீ குறைவு செய்துவிட்டாய்! (என்று அறிந்துக் கொள்!) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقَصَّ هَذَا الْحَدِيثَ قَالَ فِيهِ: «فَتَوَضَّأْ كَمَا أَمَرَكَ اللَّهُ جَلَّ وَعَزَّ، ثُمَّ تَشَهَّدْ، فَأَقِمْ ثُمَّ كَبِّرْ، فَإِنْ كَانَ مَعَكَ قُرْآنٌ فَاقْرَأْ بِهِ، وَإِلَّا فَاحْمَدِ اللَّهَ وَكَبِّرْهُ وَهَلِّلْهُ»، وَقَالَ فِيهِ: «وَإِنِ انْتَقَصْتَ مِنْهُ شَيْئًا انْتَقَصْتَ مِنْ صَلَاتِكَ»


Abu-Dawood-4777

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

கோபத்தை (மென்று விழுங்கி) கட்டுப்படுத்துபவர் (பெறும் கூலி).

4777. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தமது கோபத்தைச் செயல்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதை மென்று விழுங்கிவிடுகிறாரோ அவரை, அல்லாஹ் மறுமைநாளில் படைப்பினங்களுக்கு முன்னால் அழைப்பான்; (ஹூருல் ஈன் எனும்) சொர்க்கக் கன்னிகளில் அவர் விரும்பும் யாரையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள அவருக்கு உரிமை அளிப்பான்.

அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் அல்ஜுஹனீ (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அறிவிப்பாளர்) அபூமர்ஹூம் என்பவரின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் மைமூன் என்பதாகும்.


«مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ قَادِرٌ عَلَى أَنْ يُنْفِذَهُ، دَعَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُخَيِّرَهُ اللَّهُ مِنَ الْحُورِ الْعِينِ مَا شَاءَ»


Abu-Dawood-4857

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


كَلِمَاتٌ لَا يَتَكَلَّمُ بِهِنَّ أَحَدٌ فِي مَجْلِسِهِ عِنْدَ قِيَامِهِ ثَلَاثَ مَرَّاتٍ إِلَّا كُفِّرَ بِهِنَّ عَنْهُ، وَلَا يَقُولُهُنَّ فِي مَجْلِسِ خَيْرٍ وَمَجْلِسِ ذِكْرٍ إِلَّا خُتِمَ لَهُ بِهِنَّ عَلَيْهِ كَمَا يُخْتَمُ بِالْخَاتَمِ عَلَى الصَّحِيفَةِ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ


Abu-Dawood-726

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

726. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுகிறார்கள் என்பதை நான் (கவனமாக) பார்ப்பேன் என்று எனக்குள் கூறிக்கொண்டேன்.

“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) நின்றார்கள். கிப்லாவை முன்னோக்கித் தக்பீர் கூறினார்கள். பிறகு தமது இரு கைகளையும் தமது காதுகளுக்கு நேராக உயர்த்தினார்கள். பின்னர் தமது இடது கையை தமது வலது கையால் பிடித்தார்கள். ருகூஃ செய்ய நாடியபோது அவ்வாறே (கைகளை) உயர்த்தினார்கள். பிறகு தமது இரு கைகளையும் தமது முழங்கால்களின் மீது வைத்தார்கள். ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தியபோது அவ்வாறே (கைகளை) உயர்த்தினார்கள். பிறகு சஜ்தா செய்தபோது தமது இரு கைகளுக்குமிடையே தமது தலையை அந்த இடத்தில் வைத்தார்கள். பின்னர் அமர்ந்தார்கள். தமது இடது காலை விரித்து, தமது இடது கையை தமது இடது தொடையின் மீது வைத்தார்கள். தமது வலது முழங்கையை தமது வலது தொடையின் மீது ஊன்றினார்கள். இரண்டு விரல்களை மடக்கிக் கொண்டு ஒரு வளையம் போல் ஆக்கினார்கள்.”

(இதைக் கூறிய) பிஷ்ர் என்பவர் தமது கட்டை விரலையும் நடு விரலையும் வளையம் போல் ஆக்கி சுட்டு விரலால் சைகை செய்து, “இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வதை நான் பார்த்தேன்” என்று கூறினார்.

….


قُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي، قَالَ: فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ أَخَذَ شِمَالَهُ بِيَمِينِهِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَهُمَا مِثْلَ ذَلِكَ، ثُمَّ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَهُمَا، مِثْلَ ذَلِكَ فَلَمَّا سَجَدَ وَضَعَ رَأْسَهُ بِذَلِكَ الْمَنْزِلِ مِنْ بَيْنِ يَدَيْهِ، ثُمَّ جَلَسَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَحَدَّ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَقَبَضَ ثِنْتَيْنِ وَحَلَّقَ حَلْقَةً» وَرَأَيْتُهُ يَقُولُ: هَكَذَا وَحَلَّقَ بِشْرٌ الْإِبْهَامَ وَالْوُسْطَى وَأَشَارَ بِالسَّبَّابَةِ،


Abu-Dawood-1409

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1409.


«لَيْسَ ص مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِيهَا»


Abu-Dawood-1406

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 330

‘அந்நஜ்ம்’ எனும் (53 வது) அத்தியாயத்தில் ஸஜ்தா வசனம் உள்ளது என்போரின் ஆதாரம்.

1406. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் (குர்ஆனின்) ‘அந்நஜ்ம்’ எனும் (53 வது) அத்தியாயத்தை (அல்குர்ஆன் 53:62) ஓதி சிரவணக்கம் (ஸஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த (முஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள்) அனைவரும் சிரவணக்கம் செய்தனர்; அங்கிருந்த ஒரு வயோதிகர் மட்டும் ஒரு கையளவு சிறு கற்களையோ மண்ணையோ அள்ளித் தமது நெற்றிவரை கொண்டுசென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (பரிகாசத்துடன்) கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகவே (பத்ர் போரில்) கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ سُورَةَ النَّجْمِ فَسَجَدَ فِيهَا، وَمَا بَقِيَ أَحَدٌ مِنَ الْقَوْمِ إِلَّا سَجَدَ، فَأَخَذَ رَجُلٌ مِنَ الْقَوْمِ كَفًّا مِنْ حَصًى – أَوْ تُرَابٍ -، فَرَفَعَهُ إِلَى وَجْهِهِ، وَقَالَ: يَكْفِينِي هَذَا “، قَالَ عَبْدُ اللَّهِ: «فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُتِلَ كَافِرًا»


Abu-Dawood-1073

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1073.

‘இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜுமுஆ தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜுமுஆ தொழுகையை நடத்துவோம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«قَدِ اجْتَمَعَ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ، فَمَنْ شَاءَ أَجْزَأَهُ مِنَ الْجُمُعَةِ، وَإِنَّا مُجَمِّعُونَ»،

قَالَ عُمَرُ: عَنْ شُعْبَةَ


Abu-Dawood-1071

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1071.

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று பெருநாள் தொழுகையைப் பகலின் ஆரம்ப நேரத்தில் தொழுவித்தார்கள். பின்னர் நாங்கள் ஜுமுஆ தொழுவதற்குச் சென்றோம். ஆனால் அவர் ஜுமுஆ தொழுகைக்கு வரவில்லை. நாங்கள் தனியாகவே தொழுதோம். இந்நிகழ்ச்சி நடக்கும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தாயிஃப் நகரத்தில் இருந்தார்கள். அவர் மதீனா வந்ததும் அவரிடம் இதைப் பற்றி நாங்கள் கூறினோம். அதற்கு அவர், ‘இப்னு ஸுபைர் (ரலி) நபிவழிப்படியே நடந்துள்ளார்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)


صَلَّى بِنَا ابْنُ الزُّبَيْرِ فِي يَوْمِ عِيدٍ، فِي يَوْمِ جُمُعَةٍ أَوَّلَ النَّهَارِ، ثُمَّ رُحْنَا إِلَى الْجُمُعَةِ، فَلَمْ يَخْرُجْ إِلَيْنَا فَصَلَّيْنَا وُحْدَانًا، وَكَانَ ابْنُ عَبَّاسٍ بِالطَّائِفِ، فَلَمَّا قَدِمَ ذَكَرْنَا ذَلِكَ لَهُ، فَقَالَ: «أَصَابَ السُّنَّةَ»


Abu-Dawood-907

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

907.

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். அதில் ஓதினார்கள். அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. தொழுகை முடித்தவுடன் உபை (ரலி) அவர்களிடம், ‘நம்முடன் நீர் தொழுதீரா?’ என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்போது ‘(தவறைத் திருத்திக் கொடுப்பதற்கு) உம்மைத் தடுத்தது எது?’ என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ يَحْيَى وَرُبَّمَا قَالَ: شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَقْرَأُ فِي الصَّلَاةِ فَتَرَكَ شَيْئًا لَمْ يَقْرَأْهُ، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، تَرَكْتَ آيَةَ كَذَا وَكَذَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا أَذْكَرْتَنِيهَا»،

قَالَ سُلَيْمَانُ فِي حَدِيثِهِ: قَالَ: «كُنْتُ أُرَاهَا نُسِخَتْ»، وَقَالَ سُلَيْمَانُ: قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ كَثِيرٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا الْمُسَوَّرُ بْنُ يَزِيدَ الْأَسَدِيُّ الْمَالِكِيُّ

حَدَّثَنَا يَزِيدُ بْنُ مُحَمَّدٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” صَلَّى صَلَاةً، فَقَرَأَ فِيهَا فَلُبِسَ عَلَيْهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ لِأُبَيٍّ: «أَصَلَّيْتَ مَعَنَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَمَا مَنَعَكَ»


Next Page » « Previous Page