யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 முறை ஸுப்ஹானல்லாஹ் என்றும், 33 முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், 33 முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் 99 முறை கூறி, இறுதியில் 100 வது முறையாக “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்”
(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்)
என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே! என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதாஉ பின் யஸீத் (ரஹ்)
(முஅத்தா மாலிக்: 562)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ
«مَنْ سَبَّحَ دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَخَتَمَ الْمِائَةَ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، غُفِرَتْ ذُنُوبُهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-562.
Muwatta-Malik-Alamiah-439.
Muwatta-Malik-JawamiulKalim-486.
- இந்தச் செய்தியை அபூஉபைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர். வேறு சிலர் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர். இரண்டு வகை அறிவிப்பாளர்தொடர்களுமே சரியானவைகளாகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
நபியின் சொல்லாக வந்துள்ள செய்தி:
பார்க்க: முஸ்லிம்-1048.
சமீப விமர்சனங்கள்