ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
4172. அப்துல்லாஹ் பின் குதாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு கூட்டத்தினருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சந்திக்க வந்தேன். எங்களில் ஒவ்வொருவரும் ஒரு தேவைக்காக வந்திருந்தனர். அவர்களில், நானே கடைசியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை பார்க்க சென்றேன். அப்போது நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே!எங்களில் சிலர், ஹிஜ்ரத் முடிவடைந்து விட்டது என்ற எண்ணத்தில் உள்ளனர் என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், இறைமறுப்பாளர்களுடன் யுத்தம் நடைபெறும் காலமெல்லாம் ஹிஜ்ரத் முடிவடையாது என்று கூறினார்கள்.
وَفَدْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَفْدٍ كُلُّنَا يَطْلُبُ حَاجَةً، وَكُنْتُ آخِرَهُمْ دُخُولًا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي تَرَكْتُ مَنْ خَلْفِي وَهُمْ يَزْعُمُونَ أَنَّ الْهِجْرَةَ قَدِ انْقَطَعَتْ، قَالَ: «لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا قُوتِلَ الْكُفَّارُ»
விமர்சனங்கள்