தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-108

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உலூச் செய்யும் முறை பற்றி இப்னு அபி முலைக்கா அவர்களிடம் வினவப்பட்டபோது, ‎அவர் உஸ்மான் (ரலி) அவர்களிடம் உலூச் செய்யும் முறை பற்றி வினவப்பட்டது. ‎அப்போது அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிச் சொன்னார்கள். அவர்களிடம் ஒரு ‎தண்ணீர் பாத்திரம் கொண்டு வரப்பட்டதும் அதை தனது வலது கையில் சாய்த்து (நீர் விட்டு ‎கழுவிய பின்) கையை தண்ணீர் பாத்திரத்திற்குள் செலுத்தி மூன்று முறை வாய் ‎கொப்பளித்தார்கள். மும்முறை நாசிக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தார்கள். மும்முறை ‎முகத்தை கழுவினார்கள். பின்பு மூன்று முறை வலது கையையும்,. மூன்று முறை இடது ‎கையையும் கழுவினார்கள். பின்பு கையை தண்ணீருள் செலுத்தி தண்ணீர் எடுத்து தமது ‎தலைக்கு மஸஹ் செய்தார்கள் (காதுகளுக்கு மஸஹ் செய்யும் போது) காதுகளின் உட்புறம் ‎வெளிப்புறமும் ஒரு தடவை கழுவினார்கள். பின்பு இரு கால்களையும் கழுவினார்கள். ‎பிறகு உலூவின் முறை பற்றி கேட்டவர் எங்கே? (என்று வினவி) இவ்வாறே நான் ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன் என்று உஸ்மான் பின் ‎அப்பாஸ் (ரலி) கூறினார்கள். ‎

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் அத்தைமியி

‎(உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகின்ற சஹீஹான அனைத்து ‎ஹதீஸ்களும் தலைக்கு ஒரு முறை தான் மஸஹ் செய்யவேண்டும் என அறிவிக் கின்றன. ‎ஏனெனில் மற்ற உறுப்புக்களை மும்முறை கழுவி உலூச் செய்யவேண்டும் என்றே ‎அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்றனர். அந்த அறிவிப்புக்களில் தலைக்கு மஸஹ் ‎செய்தார்கள் என்றே (எண்ணிக்கையை குறிப்பிடாமல்) அறிவிக்கின்றனர். மற்றவை ‎களுக்கு எண்ணிக்கையை குறிப்பிட்டது போல இதற்கு எண்ணிக்கையை ‎குறிப்பிடவில்லை.)‎

(அபூதாவூத்: 108)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ الْإِسْكَنْدَرَانِيُّ، حَدَّثَنَا زِيَادُ بْنُ يُونُسَ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ زِيَادٍ الْمُؤَذِّنُ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ التَّيْمِيِّ، قَالَ:

سُئِلَ ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْوُضُوءِ، فَقَالَ: رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ سُئِلَ عَنِ الْوُضُوءِ «فَدَعَا بِمَاءٍ، فَأُتِيَ بِمِيضَأَةٍ فَأَصْغَاهَا عَلَى يَدِهِ الْيُمْنَى، ثُمَّ أَدْخَلَهَا فِي الْمَاءِ فَتَمَضْمَضَ ثَلَاثًا، وَاسْتَنْثَرَ [ص:27] ثَلَاثًا، وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى ثَلَاثًا، وَغَسَلَ يَدَهُ الْيُسْرَى ثَلَاثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَأَخَذَ مَاءً فَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ، فَغَسَلَ بُطُونَهُمَا وَظُهُورَهُمَا مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ»، ثُمَّ قَالَ: أَيْنَ السَّائِلُونَ عَنِ الْوُضُوءِ؟ «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ»

قَالَ أَبُو دَاوُدَ: ” أَحَادِيثُ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ الصِّحَاحُ كُلُّهَا تَدُلُّ عَلَى مَسْحِ الرَّأْسِ أَنَّهُ مَرَّةً، فَإِنَّهُمْ ذَكَرُوا الْوُضُوءَ ثَلَاثًا، وَقَالُوا فِيهَا: وَمَسَحَ رَأْسَهُ وَلَمْ يَذْكُرُوا عَدَدًا كَمَا ذَكَرُوا فِي غَيْرِهِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-108.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




மேலும் பார்க்க : புகாரி-159 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.