தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3252

 

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3252. ஹதீஸ் எண்-391 இல் கிராமவாசி பற்றி வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

ஆயினும், (அவற்றின் இறுதியில்) “அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்” அல்லது “அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

(அபூதாவூத்: 3252)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ الْمَدَنِيُّ، عَنْ أَبِي سُهَيْلٍ نَافِعِ بْنِ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَعْنِي فِي حَدِيثِ قِصَّةِ الْأَعْرَابِيِّ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَفْلَحَ وَأَبِيهِ، إِنْ صَدَقَ دَخَلَ الْجَنَّةَ، وَأَبِيهِ إِنْ صَدَقَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3252.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2833.



  • அபூஸுஹைல்-நாஃபிஉ பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் இஸ்மாயீல் பின் ஜஃபர் அவர்களின் சில அறிவிப்பில் மட்டுமே ‘அவருடைய தந்தை மீதாணையாக!” என்ற வார்த்தை வந்துள்ளது.
  • அபூஸுஹைல்-நாஃபிஉ பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இமாம், அப்துல்லாஹ் பின் மஸ்லமா போன்றோரின் அறிவிப்பிலும், இஸ்மாயீல் பின் ஜஃபர் அவர்களின் சில அறிவிப்பிலும் “அவருடைய தந்தை மீதாணையாக!” என்ற வார்த்தை இடம்பெறவில்லை. எனவே இந்த அறிவிப்பாளர்தொடர் ஷாத் என்ற வகையில் பலவீனமானதாகும்.
  • சிலர் எழுத்தில் ஏற்பட்ட தவறு என்றும் கூறியுள்ளனர்.

சிலர் இதை சரியானது என்று வைத்துக்கொண்டாலும் “தந்தையின் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்ற தடை வருவதற்கு முன் உள்ள நிகழ்வு என்பதால் இது தவறில்லை என்றும், அல்லது இந்த சத்தியம், பேச்சு வழக்கில் உள்ள (மனம் விரும்பி செய்யாத) வீணான சத்தியம் என்றும் விளக்கம் கூறுகின்றனர்.

மேலும் பார்க்க : புகாரி-46 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.