தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-933

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 37

குர்ஆனைப் பற்றி வந்துள்ள செய்திகளின் தொகுப்பு.

ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது? எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் வஹீ வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில், வானவர் ஒரு வாலிபரின் தோற்றத்தில் என்னிடம் வ(ந்து செய்திகளைத் த)ருவார்”என்று பதிலளித்தார்கள்.

(நஸாயி: 933)

جَامِعُ مَا جَاءَ فِي الْقُرْآنِ

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ:

سَأَلَ الْحَارِثُ بْنِ هِشَامِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ؟ قَالَ: «فِي مِثْلِ صَلْصَلَةِ الْجَرَسِ، فَيَفْصِمُ عَنِّي، وَقَدْ وَعَيْتُ عَنْهُ وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، وَأَحْيَانًا يَأْتِينِي فِي مِثْلِ صُورَةِ الْفَتَى فَيَنْبِذُهُ إِلَيَّ»


Nasaayi-Tamil-924.
Nasaayi-TamilMisc-924.
Nasaayi-Shamila-933.
Nasaayi-Alamiah-924.
Nasaayi-JawamiulKalim-923.




மேலும் பார்க்க: புகாரி-2 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.