Month: February 2024

ஹதீஸை ஆய்வு செய்யும் முறை

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹதீஸை ஆய்வு செய்யும் முறை. முன்னுரை: ஹதீஸை ஆய்வு செய்வதற்கு முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை: ஒரு ஹதீஸை ஆய்வு செய்வதின் மூலமே அது சரியானதா? அல்லது பலவீனமானதா? அல்லது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியா? என்பதை நாம் அறிந்துக் கொள்ளமுடியும். பல்வேறு ஹதீஸ்கலை அறிஞர்கள் இந்த ஆய்வின் அடிப்படையில் தான் ஹதீஸ் வகைகளையும், தரங்களையும் நமக்கு அடையாளம் காட்டியுள்ளனர். ஹதீஸ் ஆய்வுக்குத்தான் ஹதீஸ்கலை என்ற...

Hakim-7198

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

7198. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக ஷைத்தான், மோப்ப சக்தி உள்ளவன்; நாவால் நக்குபவன். எனவே, உங்கள் (உடல்) விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையோடு இருந்துகொள்ளுங்கள்.

(உணவு உண்ட) கையில் கொழுப்பு வாடை வீச ஒருவர் இரவில் உறங்கி, அதனால் அவருக்கு (தீங்கு) ஏதேனும் நேர்ந்தால், அவர் தம்மைத் தவிர வேறு யாரையும் நிச்சயமாகப் பழிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ الشَّيْطَانَ حَسَّاسٌ لَحَّاسٌ فَاحْذَرُوهُ عَلَى أَنْفُسِكُمْ مَنْ بَاتَ وَفِي يَدِهِ غَمَرٌ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


Hakim-7197

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7197.


«مَنْ بَاتَ وَفِي يَدِهِ غَمَرٌ فَعَرَضَ لَهُ عَارِضٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


Hakim-7127

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

7127. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக ஷைத்தான், மோப்ப சக்தி உள்ளவன்; நாவால் நக்குபவன். எனவே, உங்கள் (உடல்) விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையோடு இருந்துகொள்ளுங்கள்.

(உணவு உண்ட) கையில் கொழுப்பு வாடை வீச ஒருவர் இரவில் உறங்கி, அதனால் அவருக்கு (தீங்கு) ஏதேனும் நேர்ந்தால், அவர் தம்மைத் தவிர வேறு யாரையும் நிச்சயமாகப் பழிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ الشَّيْطَانَ حَسَّاسٌ لَحَّاسٌ فَاحْذَرُوهُ عَلَى أَنْفُسِكُمْ مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحٌ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


Tirmidhi-1860

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1860.


«مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


Abu-Dawood-3852

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உணவு சாப்பிட்ட பின் கை கழுவுதல்.

3852. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உணவு உண்ட) கையில் கொழுப்பு இருக்கும் நிலையில் ஒருவர் இரவில் உறங்கி, அதனால் அவருக்கு (தீங்கு) ஏதேனும் நேர்ந்தால், அவர் தம்மைத் தவிர வேறு யாரையும் நிச்சயமாகப் பழிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ نَامَ وَفِي يَدِهِ غَمَرٌ، وَلَمْ يَغْسِلْهُ فَأَصَابَهُ شَيْءٌ، فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


Tirmidhi-1859

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 48

கையில் கொழுப்பு வாடை வீச இரவில் உறங்குவது வெறுப்புக்குரியது என்பது தொடர்பாக வந்துள்ளவை.

1859. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக ஷைத்தான், மோப்ப சக்தி உள்ளவன்; நாவால் நக்குபவன். எனவே, உங்கள் (உடல்) விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையோடு இருந்துகொள்ளுங்கள்.

(உணவு உண்ட) கையில் கொழுப்பு வாடை வீச ஒருவர் இரவில் உறங்கி, அதனால் அவருக்கு (தீங்கு) ஏதேனும் நேர்ந்தால், அவர் தம்மைத் தவிர வேறு யாரையும் நிச்சயமாகப் பழிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி, இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது ”ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்தக் கருத்தில் (சிலவை), ஸுஹைல் பின் ஸாலிஹ் அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்களின் செய்தியாக வேறுசில அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.


«إِنَّ الشَّيْطَانَ حَسَّاسٌ لَحَّاسٌ فَاحْذَرُوهُ عَلَى أَنْفُسِكُمْ، مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


Shuabul-Iman-3800

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3800. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக சொர்க்கத்தில் ரஜப் என்ற ஒரு ஆறு உள்ளது. அதன் தண்ணீர் பாலை விட வென்மையாது; அதன் சுவை தேனை விட இனிமையானது. எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பு நோற்கிறாரோ அவருக்கு அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 


إن في الجنة نهرا يقال له رجب أشد بياضا من اللبن و أحلى من العسل من صام من رجب يوما سقاه الله من ذلك النهر


Shuabul-Iman-7342

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7342. நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்:

ஆண்களை விட 99 மடங்கு பெண்களுக்கு ஆசை (காமம்) அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. என்றாலும், (ஆசையை அடக்கிக் கொள்ள) அல்லாஹ் அவர்கள் மீது வெட்கத்தைப் போட்டுவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


فُضِّلَتِ الْمَرْأَةُ عَلَى الرَّجُلِ بِتِسْعَةٍ وَتِسْعِينَ جُزْءًا مِنَ اللَّذَّةِ، وَلَكِنَّ اللهَ عَزَّ وَجَلَّ أَلْقَى عَلَيْهِنَّ الْحَيَاءَ


Musnad-Ahmad-15611

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15611.

யார் அல்லாஹுடைய பாதையில் செல்லும் போது ஆயிரம் வசனங்களை ஓதுவாரோ. அவர் நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்தியாகிகள், நல்லோர்கள் ஆகியோரின் பட்டியலில் அல்லாஹ் எழுதுவான்.


«مَنْ قَرَأَ أَلْفَ آيَةٍ فِي سَبِيلِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى، كُتِبَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ النَّبِيِّينَ، وَالصِّدِّيقِينَ، وَالشُّهَدَاءِ، وَالصَّالِحِينَ، وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى»


Next Page » « Previous Page