தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-149

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அங்கத்தூய்மையினால் ஒளி.

அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அபூஹூரைரா (ரலி) அவர்கள் தொழுகைக்காக

அங்கத்தூய்மை செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பின்னால் நான் இருந்தேன். அப்போது அவர்கள், தம் கைகளை அக்குள் வரை நீட்டிக் கழுவிக்கொண்டிருந்தார்கள். நான், “அபூஹுரைராவே! இது என்ன அங்கத்தூய்மை (முறை)?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் என்னிடம், “ஃபர்ரூகின் மக்களே! நீங்கள் இங்குதான் இருக்கின்றீர்களா? நீங்கள் இருப்பதை நான் அறிந்திருந்தால், இந்த முறையில் அங்கத்தூய்மை செய்திருக்கமாட்டேன். என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் “இறைநம்பிக்கையாளர் ஒருவர் அங்கத்தூய்மை செய்யும் போது (அவர் உடலில்) தண்ணீர் படும் பகுதிகள் ஒளியாக அமையும்” என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

(நஸாயி: 149)

حِلْيَةُ الْوُضُوءِ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ خَلَفٍ وَهُوَ ابْنُ خَلِيفَةَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ قَالَ:

كُنْتُ خَلْفَ أَبِي هُرَيْرَةَ وَهُوَ يَتَوَضَّأُ لِلصَّلَاةِ، وَكَانَ يَغْسِلُ يَدَيْهِ حَتَّى يَبْلُغَ إِبْطَيْهِ فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ مَا هَذَا الْوُضُوءُ؟ فَقَالَ لِي: يَا بَنِي فَرُّوخَ أَنْتُمْ هَاهُنَا لَوْ عَلِمْتُ أَنَّكُمْ هَاهُنَا مَا تَوَضَّأْتُ هَذَا الْوُضُوءَ، سَمِعْتُ خَلِيلِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «تَبْلُغُ حِلْيَةُ الْمُؤْمِنِ حَيْثُ يَبْلُغُ الْوُضُوءُ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-149.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-149.




மேலும் பார்க்க: முஸ்லிம்-420 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.