தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-2189

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஸிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஒருநாள் அது ரமளானின் முதல் நாளா? அல்லது ஷஅபான் மாதத்தின் இறுதி நாளா? என சந்தேகத்திற்குரிய நாளில் இக்ரிமா (ரஹ்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ரொட்டி, காய்கறி, பால் ஆகியவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (என்னைப் பார்த்ததும்) ‘சாப்பிட வாருங்கள்’ என்று அழைத்தார்கள். அதற்கு, நான் நோன்பு வைத்துள்ளேன் என்று சொன்னேன். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, (இந்த நாள் சந்தேகத்திற்குரிய நாள்; இந்த நாளில் நோன்பு வைக்கக் கூடாது. ஆகவே) நீ நோன்பை விட்டுவிட வேண்டும் என வலியுறுத்திக் கூறினார்கள். (அவர்கள் ஆணையிட்டுக் கூறியதைக் கண்டு) நான், ஸுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) என இரண்டு முறை கூறினேன். அவர்கள் இன்ஷா அல்லாஹ்! (அல்லாஹ் நாடினால்) என்று கூறாமல் சத்தியம் செய்வதை நான் கண்டபோது, நான் (அவர்கள்) முன்னால் சென்று, ‘தற்போது (நீங்கள் கூறும் கூற்றிற்கு) உங்களிடம் உள்ள (ஆதாரத்)தைக் கொடுங்கள்’ என்று கேட்டேன்.

அதற்கவர்கள், “(ரமளான் முதல்) பிறையைக் கண்டு நோன்பு வையுங்கள். (அடுத்த மாதம் ஷவ்வால்) பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கும், பிறை காண்பதற்குமிடையே மேகமூட்டமோ, இருளோ குறுக்கிடுமானால் ஷஅபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பது நாள்களாக நிறைவு செய்யுங்கள்.

ரமளான் மாதத்திற்கு (ஓரிரு நாள்களுக்கு) முன்பாக நோன்பு வைத்து வரவேற்காதீர்கள். ரமளான் மாதத்தை (ஷஅபான் மாதத்தின் இறுதி நாளில் நோன்பு வைப்பதன் மூலம்) ஷஅபான் மாதத்துடன் சேர்க்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

(நஸாயி: 2189)

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ أَبِي يُونُسَ، عَنْ سِمَاكٍ، قَالَ:

دَخَلْتُ عَلَى عِكْرِمَةَ فِي يَوْمٍ قَدْ أُشْكِلَ مِنْ رَمَضَانَ هُوَ أَمْ مِنْ شَعْبَانَ، وَهُوَ يَأْكُلُ خُبْزًا وَبَقْلًا وَلَبَنًا، فَقَالَ لِي: هَلُمَّ، فَقُلْتُ: إِنِّي صَائِمٌ، قَالَ وَحَلَفَ بِاللَّهِ: لَتُفْطِرَنَّ، قُلْتُ: سُبْحَانَ اللَّهِ مَرَّتَيْنِ، فَلَمَّا رَأَيْتُهُ يَحْلِفُ لَا يَسْتَثْنِي تَقَدَّمْتُ قُلْتُ: هَاتِ الْآنَ مَا عِنْدَكَ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَ بَيْنَكُمْ وَبَيْنَهُ سَحَابَةٌ أَوْ ظُلْمَةٌ، فَأَكْمِلُوا الْعِدَّةَ عِدَّةَ شَعْبَانَ، وَلَا تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالًا، وَلَا تَصِلُوا رَمَضَانَ بِيَوْمٍ مِنْ شَعْبَانَ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2189.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-2400 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.